;
Athirady Tamil News

வெவ்வேறு விபத்துக்களில் ஐவர் பலி!!

0

இன்று (04) காலை தனமல்வில – உடவலவ வீதியில் சூரியஹார பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் மேலும் 7 பேர் காயமடைந்துள்ளனர்.

விபத்தின் போது முச்சக்கர வண்டியில் 9 பேர் பயணித்துள்ளது தெரியவந்துள்ளது.

இதேவேளை, நேற்று இரவு மஹியங்கனை முதலாம் தூண் பகுதியில் ஜீப்பும் துவிச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, நேற்றிரவு செவனகல தங்டும பிரதேசத்தில் பாதசாரி ஒருவர் மீது அடையாளம் காணப்படாத வாகனம் ஒன்று மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

இந்த விபத்தில் 49 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அதேபோல், குருநாகல் ஹெலியாவல பிரதேசத்தில் நேற்று இரவு காரும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.