;
Athirady Tamil News

ரணில் விக்கிரமசிங்க ரஷ்ய அதிகாரிகளுக்கு விடுத்தள்ள அறிவிப்பு!!

0

ரஷ்ய Aeroflot விமானம் தொடர்பான பிரச்சினை இராஜதந்திர பிரச்சினையல்ல என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ரஷ்ய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.

இது தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கை வெளிவிவகார அமைச்சின் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரஷ்ய Aeroflot விமானம் தொடர்பான பிரச்சினை தனிப்பட்ட சட்டப் பிரச்சினை என்றும், இந்த விவகாரத்தை விரைந்து தீர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நீதி அமைச்சருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் ரஷ்யாவுக்கு அறிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.