;
Athirady Tamil News

தாக்குதல் சம்பவம் 2,423 பேர் கைது !!

0

கடந்த மே மாதம் 9ஆம் திகதி காலி முகத்திடல் கோட்டா கோ கம மற்றும் மைனா கம மீது தாக்குதல் நடத்திய சந்தேகத்தில் இதுவரை 2,423 பேர் வரை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதில் 1069 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் 856 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் நேற்றும் இது தொடர்பில் 30 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த 30 பேரில் 14 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.