;
Athirady Tamil News

அமைச்சர் பிரசன்னவுக்கு கடூழியச் சிறை !!

0

வர்த்தகர் ஒருவரிடமிருந்து 64 மில்லியன் ரூபாய் கப்பம் பெற்றார் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவை குற்றவாளியாக இனங்கண்ட கொழும்பு ​​மேல் நீதிமன்றம் அவருக்கு இரண்டு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்தது.

இந்த வழக்கின் தீர்ப்பு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்னவினால் இன்று (06) வழங்கப்பட்டது. இதன்போதே, மேற்கண்டவாறு தீர்ப்பளிக்கப்பட்டது.

2015ஆம் ஆண்டு வர்த்தகர் ஒருவரை அச்சுறுத்தி கப்பம் பெற்றுள்ளமை தொடர்பான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு இந்த சிறைத்தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.