;
Athirady Tamil News

பிள்ளையை பாடசாலைக்கு அழைத்து சென்ற தாயின் சங்கிலி அறுப்பு – மீசாலையில் சம்பவம்!!

0

மோட்டார் சைக்கிளில் தனது பிள்ளையை பாடசாலைக்கு அழைத்து சென்ற தாயின் சங்கிலியை வழிப்பறி கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

யாழ்ப்பாணம் மீசாலை – டச்சு வீதி ஊடாக தனது பிள்ளையை மோட்டார் சைக்கிளில் பாடசாலைக்கு தாய் அழைத்து சென்ற வேளை அவர்களை பின் தொடர்ந்து பிறிதொரு மோட்டார் சைக்கிளில் வந்த வழிப்பறி கொள்ளையர்கள் ஆள் நடமாட்டம் அற்ற பகுதியில் தாயின் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.