;
Athirady Tamil News

தபாலில் வந்த போதை மாத்திரைகள் சிக்கின!!

0

இலங்கை சுங்கத்தின் போதைப் பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகளால் மத்திய தபால் பரிமாறம் ஊடாக போதைப் பொருள்கள் அடங்கிய 9 பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்தப் பொதிகள் ஜேர்மன் மற்றும் நெதர்லாந்திலிருந்து கொழும்புக்கும் கொழும்பிலிருந்து மஹியங்கனையில் வசிக்கும் ஒரு நபரின் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

எனினும் குறித்த முகவரி போலியானது என்பது விசாரைணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

கைப்பற்றப்பட்ட பொதிகளிலிருந்து 1985 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைப் பொருள்களின் பெறுமதி 20 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.