;
Athirady Tamil News

நெருக்கடி நிலை குறித்து அவதானம் செலுத்த வேண்டும்!!

0

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து அவதானம் செலுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (09) இடம்பெற்ற மின்சார சட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் பொதுமக்கள் குறைந்த விலையில் ஒரு யூனிட் மின்சாரத்தை பெற்றுக்கொள்ளும் வகையில் மின்சார சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு ஆட்சேபனை இல்லை என்றும் அவர் கூறினார்.

ஆரம்பத்தில் மின்சார சட்டத்தை விரும்பினாலும், டெண்டர் நடைமுறைக்கு அமைவாக செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு திருத்தம் செய்யுமாறு கோரியதாகவும் விமல் வீரவன்ச மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.