;
Athirady Tamil News

இந்தியாவிடம் இருந்து கடனுதவி – ஒப்பந்தம் கைச்சாத்தானது!!

0

நிதி அமைச்சின் செயலாளர் எம். சிறிவர்தன இன்று (10) இந்திய EXIM வங்கியுடன் டொலர் கடனைப் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார்.

இந்த ஒப்பந்தத்தில் இந்திய அரசின் சார்பில் எக்ஸிம் வங்கியின் பொது மேலாளர் நிர்மித் நரேந்திர வெட் கையெழுத்திட்டார்.

சிறு போகத்துக்கான யூரியா உரத்திற்கான உடனடி தேவையை பூர்த்தி செய்வதற்காக 65,000 மெற்றிக் தொன் யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்கு இலங்கை அரசாங்கம் இந்திய அரசாங்கத்திடம் கடனுதவி கோரியுள்ளது.

அந்த கோரிக்கையை ஏற்று, இந்தியாவில் இருந்து யூரியா உரத்தை இறக்குமதி செய்ய 55 மில்லியன் டொலர்களை கடனாக வழங்க இந்திய அரசு ஒப்புக்கொண்டது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

இதில் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவும் கலந்துகொண்டார்.

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு நாடு கடுமையான தட்டுப்பாட்டைச் சந்தித்து வரும் நிலையில், மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதே தனது முதன்மையான முன்னுரிமை என்று பிரதமர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.