;
Athirady Tamil News

பொன்னாலையில் கத்தி வெட்டு – இருவர் காயம்!!

0

யாழ்ப்பாணம் பொன்னாலைபகுதியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் இனந்தெரியாத நபர் ஒருவர் மேற்கொண்ட கத்திவெட்டில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

சம்பவத்தில் பொன்னாலையை சேர்ந்த கி.பூபாலரத்தினம் (வயது-57) பகிரதன் (வயது -41) ஆகியோரே படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு, இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாகியும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகைதரவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.