;
Athirady Tamil News

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றிய தேர்தல்!!

0

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றிய தேர்தல் இரண்டு வருடங்களின் பின்னர் இடம்பெற்றது.

நேற்று(10) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மூன்றாம் வருட மாணவர்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இராமநாதன் நுண்கலைக் பீடத்திலும் வாக்களித்தனர்.

இதன்போது வேட்பாளர்களாக வி.ஜெனார்த்தனன் மற்றும் சி.ஜெல்சின் போட்டியிட்டநிலையில் 645 வாக்குகள் பதிவான நிலையில் ஒருவாக்கு நிராகரிக்கப்பட்டதோடு 476 வாக்குகளை வாக்குகளை பெற்று கலைப்பீட மாணவர் ஒன்றியத்தலைவராக சில்வஸ்ரார் ஜெல்சின் தெரிவு செய்யப்பட்டார்.

இதனையடுத்து யாழ் பல்கலைக்கழக பிரதான மாணவர் ஒன்றியம் எதிர்வரும் வாரத்தில் அமைக்கப்படவுள்ள நிலையில் இவ்வருடம் யாழ் பல்கலைக்க்கழக மாணவர் ஒன்றியத்தலைவர் பதவி சுழ்றசிமுறையில் கலைப்பீடத்திற்கு வரவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.