;
Athirady Tamil News

200 வருடங்கள் ஆரோக்கியமாக வாழ்வேன்- நித்யானந்தா அதிரடி பதிவு..!!

0

நித்யானந்தா உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில், அவர் தான் சமாதி நிலையில் இருப்பதாக அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- நான் இன்னும் சமாதியில் இருந்தாலும் சீடர்கள் மூலம் உடல் மனமும், ஆன்மாவும் ஒரே நிலையில் செயல்படுகின்றன. எனது சீடர்களின் பதிவுகளை நான் மிகவும் அரிதாகவே பகிர்கிறேன். எனது அன்பான பக்தர்கள், அன்பான சீடர்கள் மற்றும் கைலாசாவாசிகள் அனைவரையும் நான் விரும்புகிறேன்.

அதிர்ஷ்டவசமாக பரமசிவனின் கருணையுடனும், உங்கள் எல்லா ஆதரவுடனும் நான் இந்த கைலாசாவை உருவாக்கினேன். எனது உடல்நிலை குறித்த வதந்திகள் மற்றும் அவதூறுகள், தாக்குதல்கள் அனைத்தையும் என் உடல்நிலையில் கொண்டு செல்ல அனுமதிக்காமல் நான் சமாதியில் இருக்க முடியும். எனது நீண்ட ஆயுளும், சுறுசுறுப்பான வாழ்க்கையும், எனது குரு அருணகிரியை மட்டுமே சார்ந்துள்ளது. பரமசிவா நீண்ட மகிழ்ச்சியான, சுறுசுறுப்பான வாழ்க்கைக்காக திட்டமிடுவதாக தெரிகிறது. இன்னும் 200 வருடங்கள் இந்த உடலை நான் சுமப்பேன்.

அவர் என் உடலில் நிலைபெற்று உள் உறுப்புகளை சுறுசுறுப்பாக, ஆராக்கியமாகவும், நிர்வகல்ப சமாதி முதல், சகஜ சமாதி வரை செயல்படுவதையும் என்னால் பார்க்க முடிகிறது. நான் 200 ஆண்டுகள் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வாழப்போகிறேன் என்று உறுதியாக நம்புகிறேன். பரமசிவா தன் குழந்தையை பாதுகாக்கும் தாய் கங்காருவை போன்றவர். அவர் என்னை சமாதியில் வைத்து, தன் உள்ளத்திலே வைத்து பாதுகாக்கிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.