;
Athirady Tamil News

அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக அதிகாரிகள் செயற்படுகின்றார்களா?

0

பெருந்தோட்ட பகுதிகளில் விவசாயம் செய்கின்ற காணிகளை தோட்ட நிர்வாகத்திடம் கையளிக்குமாறு பெருந்தோட்ட அமைச்சின் பெருந்தோட்ட முகாமைத்துவ பணிப்பாளர் பிரிவின் அதிகாரி ஒருவர் கடிதம் மூலம் அறிவித்தல் விடுத்துள்ளார் என மலையக தொழிலாளர் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (12) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், அரசாங்கம் தரிசு நிலங்களை விவசாயத்திற்கு பயன்படுத்துமாறு அனைவரிடமும் வேண்டுகோள்விடுத்துள்ளது.

இதற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கம் மாவட்ட செயலாளர் பிரதேச செயலாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ள நிலையில் ஒரு சில அதிகாரிகள் கொழும்பில் ஏ.சி அறைகளில் இருந்து கொண்டு சரியான தவல்களை பெற்றுக் கொள்ளாமல் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு கடிதம் மூலம் அறிவிப்பது என்பது அரசாங்கத்தின் கொள்கைக்கு மாறாக அதிகாரிகள் செயற்படுகின்றார்களா? என்ற கேள்வி எமக்கு எழுகின்றது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹட்டன் வெலிஒயா தோட்டத்தில் விவசாயம் செய்துவருகின்ற வேலு இராமச்சந்திரன் என்பவருடைய காணியை தோட்ட நிர்வாகத்திடம் கையளிக்குமாறு பெருந்தோட்ட அமைச்சின் பெருந்தோட்ட முகாமைத்துவ பணிப்பாளர் பிரிவின் அதிகாரமளிக்கப்பட்ட அதிகாரி ஒருவர் காணி சட்டவிதிகளுக்கு முரனாக காணியை தன்வசம் வைத்திருப்பதாகவும் இது காணி சட்ட விதிகறுக்க முரணானது எனவும் எனவே எதிர்வரும் 05.07.2022 திகதிக்கு முன்பு காணியை தோட்ட நிர்வாகத்திடம் கையளிக்குமாறும் கடிதம் மூலம் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

பதிவுத்தபாளில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்த கடிதத்தில் அப்புறப்படுத்தல் அறிவித்தல் எனும் தலைப்பில் இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வேலு ராமச்சந்திரன் என்பவர் காணி சட்ட விதிகளுக்கு முரனாக செயற்படுவதாகவும் எனவே இந்த காணியை குறிப்பிட்ட திகதிக்கு முன்பதாக தோட்ட நிர்வாகத்திடம் கையளிக்குமாறும் அதில் கோரப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக எங்களுடைய கட்சியின் மலையக தொழிலாளர் முன்னணியின் உப தலைவர் கிருஸ்ணன் எனது கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார். நான் எந்த காரணம் கொண்டும் காணியை தோட்ட நிர்வாகத்திடம் கையளிக்க வேண்டாம் என தெரிவித்துள்ளேன்.

இது எவ்வாறு நடைபெறுகின்றது என்பது தொடர்பாக குறித்த தொழிலாளர்களுக்கு புரிந்து கொள்ள முடியவில்லை. வேலு ராமச்சந்திரன் என்பவர் நீண்டகாலமாக குறித்த காணியில் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றார். தோட்ட நிர்வாகம் இது தொடர்பாக எந்தவிதமான ஆட்சேபனையையும் தெரிவிக்காத ஒரு நிலையில் கொழும்பில் இருந்து இந்த கடிதம் எவ்வாறு வந்தது என்பது தொடர்பாக புரியாத பதிராகவே இருக்கின்றது.

1989 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி வெலி ஒயா தோட்ட அதிகாரி அகரவத்த நோட்டன் கிராம சேவகருக்கு குறிப்பிட்ட காணியில் வேலு ராமச்சந்திரனின் தந்தையான சின்னக்கன்னு வேலு விவசாயம் செய்வதை உறுதிப்படுத்தி கடிதம் ஒன்றையும் வழங்கியுள்ளார்.

அதாவது 32 வருடங்களுக்கு முன்பு வேலு ராமச்சந்திரனின் தந்தையார் விவசாயம் செய்து வந்த காணியை திடீரென தற்பொழுது தோட்ட நிர்வாகத்திடம் கையளிக்குமாறு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருப்பமையானது எதிர்காலத்தில் ஏனைய தொழிலாளர்களுக்கும் இவ்வாறான கடிதங்களை அனுப்புவதற்கான ஒரு முன்ஏற்பாடா என்ற சந்தேகமும் எமக்கு இருக்கின்றது.

எனவே எந்த காரணம் கொண்டும் எங்களுடைய பெருந்தோட்ட தொழிலாளர்கள் தற்பொழுது விவசாயம் செய்து வருகின்ற காணியை தோட்ட நிர்வாகத்திடம் கையளிக்க முடியாது.

எனவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ பெருந்தோட்ட அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுக்கு உடனடியாக இந்த கடிதம் அனுப்புகின்ற விடயத்தை தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் அவர்களுக்கு பின்றபற்ற வேண்டிய நடைமுறை தொடர்பாகவும் உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டும் எனவும் நாம் கோரிக்கை ஒன்றையும் முன்வைக்கின்றோம்.

இந்த விடயம் தொடர்பாக எதிர்வரும் பாராளுமன்றத்திலும் குரல் எழுப்பவுள்ளதுடன் ஏற்கனவே நான் இது தொடர்பாக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்திருக்கின்றேன். இதற்கு அனைவரும் கட்சி அரசியல் பேதங்களை மறந்து செயற்பட முன்வர வேண்டும் எனவும் வேலுசாமி இராதாகிருஸ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.