;
Athirady Tamil News

குருவிட்ட பொஹரபாவ பிரதேசத்தில் தந்தையை அடித்து கொன்ற மகன்!!

0

குருவிட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொஹரபாவ பிரதேசத்தில் மகன் ஒருவர் தனது தந்தையை கட்டையால் அடித்து கொலை செய்துள்ளார்.

இக்கொலை சம்பவம் நேற்று (12) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர் 66 வயதுடைய பரகடுவ, பொஹொரபாவ பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குடிபோதையில் வந்த மகன் அவரது மனைவியை தாக்கிய போது அவரை காப்பற்ற முற்பட்ட தந்தையை தடியால் தாக்கிய கொலை செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கொலையுடன் தொடர்புடைய 34 வயதுடைய சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் குருவிட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.