;
Athirady Tamil News

புதிதாக 6,594 பேருக்கு தொற்று- கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியது..!!

0

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு கடந்த 3 நாட்களாக 8 ஆயிரத்திற்கும் மேல் இருந்தது. இந்நிலையில் இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,594 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. நேற்று பாதிப்பு 8,084 ஆக இருந்தது. இன்று 18 சதவீதம் பாதிப்பு குறைந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 32 லட்சத்து 36 ஆயிரத்து 695 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 4,035 பேர் மீண்டுள்ளனர்.

இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 26 லட்சத்து 61 ஆயிரத்து 370 ஆக உயர்ந்துள்ளது. தற்போது சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 50,548 ஆக உள்ளது. இது நேற்றை விட 2,533 அதிகம் ஆகும். இதுவரை 195 கோடியே 35 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்று 3,21,873 மாதிரிகளும், இதுவரை 85.54 கோடி மாதிரிகளும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.