;
Athirady Tamil News

நெல்லையில் எஸ்.ஆர்.எம்.யூ. ஆர்ப்பாட்டம்..!!

0

தெற்குரெயில்வே மஸ்தூர் யூனியன் மதுரை கோட்ட நெல்லை கிளை சார்பில் நெல்லை சந்திப்பு ரெயில்நிலையம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்தியசங்க துணைத்தலைவர் சுப்பையா தலைமை தாங்கினார். எஸ்.ஆர். எம். யூ.

நெல்லை கிளை தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார். கிளை செயலாளர் அய்யப்பன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அகில இந்திய அஞ்சல் ஓய்வூதியர் சங்க செயற்குழு உறுப்பினர் சண்முகசுந்தரராஜா சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் கோவை-சீரடி சுற்றுலா விரைவு ரெயிலை தனியாருக்கு விற்பனை செய்ததை திரும்பபெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.