;
Athirady Tamil News

யாழ்.பிரதான வீதியில் விபத்து – பெண்கள் காயம் – வாகனம் தப்பியோட்டம்!!

0

யாழ்ப்பாணம் பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இரு பெண்களை வேகமாக வந்த ஹயஸ் ரக வாகனம் மோதி விபத்துக்கு உள்ளாக்கி விட்டு தப்பி சென்றுள்ளது.

யாழ்ப்பாணம் பிரதான வீதியில் , மார்ட்டின் வீதி சந்திக்கு அருகாமையில் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு 7.30 மணியளவில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீதியில் பெண்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை , பின்னால் மிக வேகமாக வந்த ஹயஸ் ரக வாகனம் அவர்களை மோதி தள்ளி விட்டு , வேகமாக அங்கிருந்து தப்பியோடியதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

காயமடைந்த இரு பெண்களையும் மீட்டு யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.