;
Athirady Tamil News

ஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை..!!

0

ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் அப்பகுதிக்குச் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு படையினரை நோக்கி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். விசாரணையில், கடந்த மாதம் 30-ம் தேதி பள்ளி ஆசிரியை சுட்டுக் கொன்ற விவகாரத்தில் தொடர்பு உடையவர்கள் என தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.