;
Athirady Tamil News

கொழும்பின் பல பகுதிகளில் நாளை (18) நீர் வெட்டு!!

0

கொழும்பின் பல பகுதிகளில் நாளை (18) இரவு 11.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (19) பிற்பகல் 3.00 மணி வரை 16 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி கொழும்பு 05 மற்றும் கொழும்பு 06 ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொழும்பு 04 பகுதிக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பு நீர் மற்றும் கழிவு நீர் முகாமைத்துவ அமைப்பின் மேம்படுத்தல் பணிகள காரணமாகவே இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.