;
Athirady Tamil News

தீவக கல்வி வலய முன்பள்ளி ஆசிரியர்களுக்கான விசேட செயலமர்வு ( படங்கள் இணைப்பு)

0

தீவக வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.சி.பவானந்தன் அவர்களின் ஏற்பாட்டில் தீவக வலய முன்பள்ளி ஆசிரியர்களுக்கான விசேட செயலமர்வு புங்குடுதீவு உலக மையம் மற்றும் புங்குடுதீவு சைவ இளைஞர் சங்கம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த அனுசரணையில் வேலணை துறையூர் ஐயனார் அமுதசுரபி மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இவ்விசேட செயலமர்வின் முதற்கட்ட செயற்பாடுகள் இலங்கை திறந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் திருமதி ஸ்ரீரங்கநாதன் அவர்களினால் சிறப்பாக நடாத்தப்பட்டது.

அடுத்த செயலமர்வுகள் தொடர்ந்து வரும் விடுமுறை நாட்களில் கல்வித்திணைக்கள சுற்றுநிருபத்தின் அடிப்படையில் நடைபெறும் என்பதனையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம். இந்நிகழ்வில் புங்குடுதீவு உலகமையத்தின் தலைவர் சபா பரமேஸ்வரன், செயலாளர் கருணாகரன் குணாளன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

தகவல்.. திரு.குணாளன் புங்குடுதீவு.

You might also like

Leave A Reply

Your email address will not be published.