;
Athirady Tamil News

பாடசாலைகளுக்கு விடுமுறை; கல்வி அமைச்சு திடீர் அறிவிப்பு !!

0

கொழும்பு மாநகர எல்லைக்கு உட்பட்ட பிரதேசங்களில் உள்ள அனைத்து அரச மற்றும் அரச அனுசரனை பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு அடுத்த வாரம் விடுமுறை வழங்கப்படவுள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர் இதை அறிவித்துள்ளார்..

இதற்கமைய எதிர்வரும் திங்கட்கிழமை (20) முதல் ஒரு வார காலத்திற்கு பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், இணையவழியாக கல்வி செயற்பாடுகளை முன்னெடுக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொழும்பு புறநகர்ப் பகுதிகள், வெளிமாவட்ட நகர எல்லைகள் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளின் அதிபர்கள் பாடசாலைகளை மூடுவதா அல்லது இணைய முறையில் செயல்படுவதா என்பதை அடுத்த வாரம் முடிவு செய்யலாம்.

மேலும், கிராமிய பாடசாலைகளின் செயற்பாடுகள் குறித்த தீர்மானம் அதிபர்களின் தீர்மானங்களை பொறுத்தே அமையும் என்றும் கல்வி அமைச்சு செயலாளர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.