;
Athirady Tamil News

நாளை முதல் காலையில் மின்வெட்டு இல்லை (வீடியோ)

0

நாளை (20) முதல் காலை வேளைகளில் மின்வெட்டை அமுல்படுத்தப்படாமல் இருக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

கல்வி அமைச்சின் கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அதன்படி நாளை காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், மதியம் 12 மணி முதல் இரவு 10.30 மணி வரை இரண்டரை மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.