;
Athirady Tamil News

லாலு பெயர் கொண்டவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டி..!!

0

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் முடிவடைவதையொட்டி புதிய ஜனாதிபதியை தேர்ந்து எடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18-ந் தேதி நடக்கிறது. ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 15-ந்தேதி தொடங்கியது. வருகிற 29-ந்தேதியுடன் மனு தாக்கல் முடிவடைகிறது. தமிழ்நாடு, டெல்லி, மராட்டியம், பீகார், ஆந சேர்ந்த 11 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். மனு தாக்கல் செய்தவர்களின் ஒருவரின் பெயர் லாலு பிரசாத் யாதவ்.

முன்னாள் மத்திய மந்திரியும் பீகார் முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான லாலு பெயர் கொண்டவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார். அவர் பீகார் மாநிலம் சரண் பகுதியை சேர்ந்தவர் ஆவார்.42 வயதான இந்த லாலு பிரசாத் யாதவ் 2017-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ராம்நாத் கோவிந்தை எதிர்த்து போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.