;
Athirady Tamil News

இந்தியா அதிக பதக்கங்கள் பெற்று புதிய சாதனை படைக்கும் என நம்புகிறேன் – பிரதமர் மோடி..!!

0

செஸ் ஒலிம்பியாட் ஜோதி தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: நமது முன்னோர்கள் மூளையின் பகுப்பாய்வு வளர்ச்சிக்காக செஸ் போன்ற விளையாட்டுகளைக் கண்டுபிடித்தனர். கடந்த 8 ஆண்டுகளில் இந்தியாவில் செஸ் போட்டியின் திறன் அதிகரித்துள்ளது. செஸ் போட்டியை விளையாடும் குழந்தைகள் பிரச்சினைகளை தீர்க்கும் திறனைப் பெற்றவர்களாக மாறி வருகின்றனர். செஸ் போட்டியில் சரியான நகர்வை முன்னெடுப்பதன் மூலம் வெற்றியை பெறலாம். தொலைநோக்கு சிந்தனை உள்ளவர்கள் சிறந்த வெற்றியைப் பெறலாம் என செஸ் விளையாட்டு சொல்கிறது. செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிக வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்தியா அதிக பதக்கங்கள் பெற்று புதிய சாதனை படைக்குமென நம்புகிறேன் என தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.