;
Athirady Tamil News

யாழில் இன்றும் ஆசிரியர்கள் போராட்டம்!! (படங்கள்)

0

யாழ்ப்பாணத்தில் க.பொ.த சாதாரன தர விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் இன்றைய தினமும் எரிபொருள் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரிக்கு முன்னால் இன்றைய தினம் காலை காலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் உரிய எரிபொருள் வழங்கப்பட வேண்டும் அல்லது தமக்கான எரிபொருளை பெறுவதற்கு குறிப்பிட்ட எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றினை ஒதுக்குமாறும் கோரியே இப்போராட்டம் இடம்பெற்றது.

“இதன் போது றோட்டில் நிற்பதா? போட்டில் நிற்பதா?”, “பெற்றோல் அடிப்பதா?விடைத்தாள் திருத்துவதா?” போன்ற கோசங்களும் எழுப்பப்பட்டன.

அதேவேளை நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்.மத்திய கல்லூரியில் எரிபொருள் வேண்டும் என கோரி ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.