;
Athirady Tamil News

ஜம்மு காஷ்மீரில் கடந்த 24 மணி நேரத்தில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை..!!

0

ஐம்மு காஷ்மீரின் சண்டிகம் லோலாப் பகுதியில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி ஷோகத் அஹ்மத் ஷேக்கிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், குப்வாரா மற்றும் குல்காம் மாவட்டங்களில் நேற்று காவல்துறையினர் மற்றும் ராணுவத்தினர் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு மறைவிடத்தில் இருந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

இதன் முடிவில் பயங்கரவாத அமைப்பான லஷ்கர் ஈ தொய்பாவை சேர்ந்த இரண்டு பேர் உள்பட 4 பயங்கரவாதிகளை, பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். இந்நிலையில் இன்றும் தொடர்ந்து தேர்தல் வேட்டை நடைபெற்றது. இதில் புல்வாமா உள்பட இரண்டு பகுதிகளில் நடைபெற்ற என்கவுண்டர்களில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 7 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.