;
Athirady Tamil News

ஆஸி அமைச்சரை சந்தித்தார் பிரதமர் !!

0

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அவுஸ்திரேலியாவின் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கிளேர் ஓ’நீலுக்கும் இடையிலான சந்திப்பு, பிரதமர் அலுவலகத்தில் இன்று (20) நடைபெற்றது.

இலங்கைக்கு அவுஸ்திரேலியாவின் தொடர்ச்சியான ஆதரவையும் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கான இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளையும் அமைச்சர் வெளிப்படுத்தினார்.

இலங்கையில் அவுஸ்திரேலிய முதலீடுகளை ஊக்குவிப்பதில் அவுஸ்திரேலியா ஆர்வமாக உள்ளதாகவும் அவுஸ்திரேலிய சுற்றுலாவை இலங்கைக்கு தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கும் அவுஸ்திரேலிய அரசாங்கம் ஆர்வமாக உள்ளதாகவும் ஆஸி அமைச்சர் தெரிவித்தார்.

வெளிநாடுகளில் இருந்து முதலீடுகளை மேற்கொள்ளக்கூடிய ஏற்றுமதி சார் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதில் இலங்கை கவனம் செலுத்துவதாக பிரதமர் விளக்கினார்.

அவுஸ்திரேலிய அரசாங்கம் கப்பல் போக்குவரத்தை அபிவிருத்தி செய்யத் தயாராகி வருவதாக விளக்கிய அமைச்சர், கடல் பாதுகாப்பு மற்றும் மனித கடத்தல் தொடர்பான தமது அரசாங்கத்தின் கொள்கையை விளக்கினார்.

மனிதக் கடத்தலை நிறுத்துவதை உறுதி செய்வதில் இலங்கை அரசாங்கமும் பாதுகாப்புப் படையினரும் உறுதியுடன் இருப்பதாக குறிப்பிட்ட பிரதமர், இலங்கைக்கு 50 மில்லியன் டொலர் அபிவிருத்தி-உதவி பொதியை வழங்கியமைக்காக அவுஸ்திரேலிய அரசாங்கத்துக்கு நன்றியை தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.