;
Athirady Tamil News

மேற்கு வங்காள சட்டசபையில் நூபுர் சர்மாவை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..!!

0

பா.ஜ.க. செய்தித் தொடர்பாளராக இருந்த நூபுர் சர்மா டி.வி. விவாதம் ஒன்றில் பங்கேற்றுப் பேசுகையில் நபிகள் நாயகம் பற்றி ஆட்சேபகரமான கருத்துகளை வெளியிட்டார். இதில் நூபுர் சர்மாவின் கருத்தை ஆதரித்து மற்றொரு பா.ஜ.க. நிர்வாகியான நவீன் ஜிண்டால் கருத்து வெளியிட்டார். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சர்ச்சைக்குரிய பா.ஜ.க. நிர்வாகிகள் இருவர் மீதும் கட்சி மேலிடம் நடவடிகை எடுத்துள்ளது. நூபுர் சர்மாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி, உத்தர பிரதேசம், மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட் மாநிலங்களில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், பா.ஜ.க. முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மாவைக் கண்டித்து மேற்கு வங்காள சட்டசபையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதை சட்டசபை விவகார மந்திரி பார்த்தா சட்டர்ஜி தாக்கல் செய்தார். அப்போது பேசிய முதல் மந்திரி மம்தா பானர்ஜி, சில தலைவர்கள் பேசியதை வன்மையாகக் கண்டிக்கிறேன். பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக மதங்களுக்கிடையே வெறுப்பை பரப்பும் மிகப்பெரிய சதியில் இது ஓர் அங்கம் என தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.