;
Athirady Tamil News

காலில் முள் குத்தியதாக சிகிச்சை பெற்ற அராலி இளைஞன் உயிரிழப்பு!!

0

காலில் முள் குத்தியதாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டஇளைஞன் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார்.

அராலி மேற்கு வட்டுக்கோட்டையை சேர்ந்த தருமராசா மதிகரன் (வயது 28) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் காலில் முள் ஒன்று குத்தியதாகவும், அவ்விடத்தில் வலி ஏற்பட்டு உள்ளதாக கூறி வைத்திய சாலையில் சிகிச்சை பெற வந்த நிலையில் விடுதியில் அனுமதிக்கப்பட்டு இளைஞனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

அந்நிலையில் இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.