;
Athirady Tamil News

ரெயிலில் மது கடத்திய 2 பேர் கைது..!!

0

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் ரெயில்வே போலீசார் பிளாட்பாரங்களில் ரெயில்களிலும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து சென்னை செல்லும் காவேரி எக்ஸ்பிரஸ் ரெயில் பிளாட்பாரம் 5 இல் வந்து நின்றது. அதில் சட்டவிரோதமான பொருட்கள் கடத்தப்படுகிறதா என போலீசார் பயணிகளை சோதனை செய்தனர். அப்போது முன்பதிவு செய்யப்பட்ட எஸ் 7 கோச்சில் சந்தேகத்தின் பேரில் 3 வாலிபர்களை விசாரணை மேற்கொண்டதில் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியுள்ளனர். இதில் சந்தேகம் அடைந்த ரயில்வே போலீசார் இருவரையும் பிடித்து சோதனை செய்ததில் கர்நாடக மாநிலம் பெங்களூருவிலிருந்து தமிழகத்திற்கு சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட 12 லிட்டர் கொள்ளளவு உள்ள வெளிமாநில மது பாட்டில்களை பறிமுதல் செய்து இரண்டு வாலிபர்களையும் கைது செய்தனர். மேலும் இருவரையும் ரயில்வே காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில் கர்நாடக மாநிலம் ராம்நகர் பகுதியை சேர்ந்த தாளப்பா என்பவரின் மகன் தினேஷ் (33), ஒசக்கரஹல்லி பகுதியை சார்ந்த அம்பாலா கவுடா என்பவரின் மகன் நாகராஜ் (34), பெங்களூர் சிப்காட் ரோடு பகுதியை சேர்ந்த சங்கர் ராவ் என்பவரின் மகன் தவ்லாத் ராவ் (50) என்பது தெரியவந்தது இதனையடுத்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து ரயிலில் கடத்தி வரப்பட்ட மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.