;
Athirady Tamil News

திருப்பத்தூரில் கனமழை..!!

0

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று மாலை முதலே மேகம் மந்தமாக காணப்பட்டது. ஆம்பூர் பகுதியில் சாரல் மழை பெய்தது. மற்ற இடங்களில் மழை பெய்யவில்லை. பாலாற்றின் குறுக்கே ஆந்திராவில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் நிரம்பி தமிழகத்திற்கு தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தொடர் மழை காரணமாக திருப்பத்தூர் அருகே உள்ள ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியில் அதிகளவில் தண்ணீர் கொட்டுகிறது.இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வனத்துறை எச்சரிக்கையை மீறி பலர் ஜலகம்பாறை நீர்வீழ்ச்சியில் ஆனந்த குளியல் போட்டு வருகின்றனர். திருப்பத்தூர் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:- மேல் ஆலத்தூர் 51.2, பொன்னை 72, ஆம்பூர் 10, ஆலங்காயம் 12,

You might also like

Leave A Reply

Your email address will not be published.