;
Athirady Tamil News

அவுஸ்திரேலிய உள்நாட்டலுவல்கள் அமைச்சருடன் சஜித் சந்திப்பு..!!

0

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் அவுஸ்திரேலிய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கிளேர் ஒ நீலுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (20) பிற்பகல் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்றது.

இந்நெருக்கடியான காலகட்டத்தின் போது இலங்கைக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் வழங்கிய ஆதரவிற்கும் ஒத்துழைப்பிற்கும் தனது நன்றிகளைத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அவுஸ்திரேலியா இலங்கையின் நீண்டகால உற்ற நண்பன் என்பதையும் அவர் நினைவு கூர்ந்தார்.

தற்போதைய சூழ்நிலையை எதிர்கொள்ள இலங்கைக்கு மேலும் ஆதரவளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த எதிர்க்கட்சித் தலைவர், குறிப்பாக சுகாதாரத் துறையில் நிலவும் தேவைப்பாடுகள் குறித்தும் அவுஸ்திரேலிய உள்நாட்டலுவல்கள் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.