;
Athirady Tamil News

மொரட்டுவ மாநகர சபை உறுப்பினர் உட்பட 5 பேர் கைது..!!

0

கடந்த மே மாதம் 09 ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் கலவரத்தில் ஈடுபட்ட மொரட்டுவ மாநகர சபை உறுப்பினர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (21) பிற்பகல் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் மொரட்டுவை மாநகரசபை உறுப்பினர், மேயரின் பிரத்தியேக செயலாளர், மொரட்டுவ மாநகர சபையின் பாதுகாவலர், சுகாதார ஊழியர் மற்றும் மாநகர சபை ஊழியர் ஒருவரும் அடங்குவர்.

சந்தேகநபர்கள் இன்று (22) கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.