;
Athirady Tamil News

சிறந்த ஜனாதிபதியாக திகழ்வார் திரவுபதி முர்மு – பிரதமர் மோடி..!!

0

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக திரவுபதி முர்மு தேர்வு செய்யப்பட்டார் என அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்தார். முதன்முறையாக பழங்குடியின பெண் வேட்பாளருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். திரௌபதி முர்மு ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநராக பொறுப்பு வகித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரவுபதி முர்முவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மோடி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘சமூகத்துக்காகவும், ஏழை, அடித்தட்டு, விளிம்புநிலை மக்கள் அதிகாரம் பெறுவதற்காகவும் தனது வாழ்வை அர்ப்பணித்தவர் முர்மு. நல்ல நிர்வாக அனுபவத்தைப் பெற்றவரான அவர் கவர்னராகவும் மிகச் சிறப்பாக செயல்பட்டவர். கொள்கை விஷயங்கள் குறித்த முர்முவின் புரிதலும், அவரின் இரக்கத்தன்மையும் நம் நாட்டுக்கு பெரிதும் பயனளிக்கும். நம் நாட்டின் மிகச் சிறந்த ஜனாதிபதியாக திரவுபதி முர்மு திகழ்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.