;
Athirady Tamil News

ரஷ்ய தூதுவர் விமலிடம் கூறிய முக்கிய விடயம்..!!

0

பாதுகாப்பு அமைச்சுக்கு ரஷ்யா வழங்கிய கடன் உதவியில் பாதிக்கும் மேற்பட்ட தொகை இன்னும் எஞ்சியிருப்பதாக ரஷ்ய தூதுவர் தெரிவித்துள்ளதாக விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் கோரிக்கை விடுக்கும் பட்சத்தில் தற்போதைய நெருக்கடியான நிலமைக்கான குறித்த கடன் தொகையை பெற்றுக்கொள்வது குறித்து பரிசீலிக்க முடியும் என தூதுவர் தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

11 சுயேச்சைக் கட்சிகளின் தலைவர்கள் நேற்று (21) ரஷ்ய தூதுவரை சந்தித்ததுடன், அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச இவ்வாறு தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.