;
Athirady Tamil News

புலிகளின் தலைவர் தேசிய தலைவரல்ல என்பதை மறைமுகமாக கூறிய அமைச்சர் டக்ளஸ்!! (படங்கள்)

0

மக்கள் சேவை கொண்டதாகவே எனது கடமை இருக்குமே தவிர எவ்வித சுயலாபமும் இருக்காது.ஆகவே பலரும் பலதை கதைக்கலாம்.எனக்கு அதை பற்றி அக்கறை இல்லை.இவர்களுக்கு ஒரு தேசிய தலைவர் ஒருவர் இருந்தவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம்.வடகிழக்கு உட்பட மலையகத்திலும் 3 தேசிய தலைவர்கள் இருந்தனர்.இது நான் சொல்கின்ற தேசிய தலைவர்கள்.வேறு நபர்கள் வேற விதமாக கூறலாம்.தே என்ற சொல்லுக்கு ஒற்றை கொம்பினை மாற்றி (தெ) என்ற தலைவர் வேறு என்பதாகும்.தமிழ் பேசும் மக்களின் தேசிய தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள்.இரண்டாவது எம்.. எச். எம். அஷ்ரப் அவர்கள் மூன்றாவது சௌமியமூர்த்தி தொண்டமான் ஆகியோரே உள்ளனர் .இம்மூவரையும் தான் நான் தமிழ் பேசும் மக்களின் தேசிய தலைவராக கருதுகின்றேன் என கடற்றொழில் வள அமைச்சர் கே. என். டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் ஒலுவில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்து மக்கள் பாவனைக்கு உட்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்த புதன்கிழமை(22) கடற்றொழில் வள அமைச்சர் கே. என். டக்ளஸ் தேவானந்தா குறித்த துறைமுகத்தை பார்வையிட்ட பின்னர் அங்கு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் குறிப்பிட்டதாவது .

மக்கள் சேவை கொண்டதாகவே எனது கடமை இருக்குமே தவிர எவ்வித சுயலாபமும் இருக்காது.ஆகவே பலரும் பலதை கதைக்கலாம்.எனக்கு அதை பற்றி அக்கறை இல்லை.இவர்களுக்கு ஒரு தேசிய தலைவர் ஒருவர் இருந்தவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம்.வடகிழக்கு உட்பட மலையகத்திலும் 3 தேசிய தலைவர்கள் இருந்தனர்.இது நான் சொல்கின்ற தேசிய தலைவர்கள்.வேறு நபர்கள் வேற விதமாக கூறலாம்.தே என்ற சொல்லுக்கு ஒற்றை கொம்பினை மாற்றி (தெ) என்ற தலைவர் வேறு என்பதாகும்.தமிழ் பேசும் மக்களின் தேசிய தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள்.இரண்டாவது எம்.. எச். எம். அஷ்ரப் அவர்கள் மூன்றாவது சௌமியமூர்த்தி தொண்டமான் ஆகியோரே உள்ளனர் .இம்மூவரையும் தான் நான் தமிழ் பேசும் மக்களின் தேசிய தலைவராக கருதுகின்றேன்

ஒலுவில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்து மக்கள் பாவனைக்கு உட்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.மக்களின் வாழ்வாதாரத்தை வளப்படுத்தி கட்டியெழுப்புவதற்கு பல வேலைத்திட்டங்கள் உள்ளன.இந்த மாவட்டத்தின் மக்களுக்கு தான் முன்னுரிமை வழங்கப்படும்.தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வைக்கோல் பட்டறை நாய் மாதிரி .அதாவது தாங்களும் செய்ய மாட்டார்கள்.செய்பவர்களையும் விட மாட்டார்கள் என்றார்.

கடந்த 2008ஆம் ஆண்டில் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்ட ஒலுவில் மீன்பிடித் துறைமுகம் 2013 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதியும்இ துறைமுக அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஸவால் திறந்து வைக்கப்பட்டது. 2013ஆம் ஆண்டு திறந்துவைக்கப்பட்ட போதிலும் . ஆனால் ஒரு வர்த்தக கப்பல்கூட ஒலுவில் துறைமுகத்துக்கு இது வரை வரவே இல்லை.ஏனெனில் மணல் நிரம்புவதால்இ இதுவரை எவ்வித பயனையும் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் பிரகாரம் ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தின் செயற்பாடுகளை சம்பிரதாயபூர்வமாக மீள ஆரம்பிப்பதற்கும் குறித்த துறைமுகத்திற்கு மறைந்த முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம் அஸ்ரப்பின் பெயரினை வைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக குறிப்பிட்டார்.

எனவே இவ்விடயத்தில் வீணான அரசியல் செய்யாமல் அனைத்து தரப்பினரும் முன்வந்து ஒத்துழைப்புகளை வழங்க வேண்டு என கேட்டுக்கொண்டார்.

இதன் போது துறைசார் அதிகாரிகள் மீனவ சமூகத்தை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

கடந்த கால விஜயத்தின் போது முதல் கட்டமாக மீன் பதனிடும் தொழில் கூடங்கள் போன்றவை நிர்மாணிக்கப்பட்டு செயற்படுத்தப்ட்ட நிலையில் மீனவ சமூகத்தின் பாவனைக்கு அமைச்சரால் கையளிக்கப்பட்டுள்ளன.

பல மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட துறைமுகத்தை பராமரிப்பதற்கு துறைமுக அபிவிருத்தி அதிகார சபை மாதாந்தம் 56 இலட்சம் ரூபாய் வரை செலவிட நேர்ந்தது. இந்நிலையில் கடற்றொழில் வள அமைச்சர் கே. என். டக்ளஸ் தேவானந்தாவின் பகீரத முயற்சிகளை தொடர்ந்து துறைமுக அமைச்சுஇ கடற்றொழில் வள் அமைச்சு ஆகியன கூட்டாக அண்மையில் சமர்ப்பித்த அமைச்சரவை யோசனை மூலமாக கடற்றொழில் அமைச்சின் பொறுப்பில் ஒலுவில் துறைமுகம் வந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.