;
Athirady Tamil News

புதிய கார் மதிப்பீட்டு திட்டம்- வரைவு அறிவிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல்..!!

0

பாரத்-என்சிஏபி எனப்படும் புதிய கார் மதிப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான வரைவு அறிவிக்கைக்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்கரி, ஒப்புதல் அளித்துள்ளார். பாரத்-என்சிஏபி திட்டம், இந்தியாவில் வாகனங்களுக்கு விபத்து சோதனைகளில் செயல்திறன் அடிப்படையில் நட்சத்திர மதிப்பீடுகள் வழங்க வகை செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நுகர்வோரை மையமாகக் கொண்ட இந்த தளத்தில் வாடிக்கையாளர்கள் தங்கள் நட்சத்திர மதிப்பீடுகளின் அடிப்படையில் பாதுகாப்பான கார்களைத் தேர்வுசெய்யலாம். அதே நேரத்தில் பாதுகாப்பான வாகனங்களை தயாரிப்பதில் இந்தியாவில் உள்ள நிறுவனங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டியையும் இது ஊக்குவிக்கும். இந்தியாவை உலகின் முதல்நிலை வாகன தயாரிப்பு மையமாக மாற்றும் நோக்கத்திற்கு பாரத் என்சிஏபி திட்டம் முக்கிய கருவியாக இருக்கும் என்று மத்திய மந்திரி நிதின்கட்கரி தெரிவித்துள்ளார். இந்திய வாகனத்துறையை தற்சார்பு கொண்டதாக மாற்றவும் இது உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.