;
Athirady Tamil News

தமிழ்மொழி பாடநெறியை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!!

0

அரசகரும மொழிகள் திணைக்களத்தினால் பதவி நிலை உத்தியோகத்தர்களுக்கு நிகழ்த்தப்பட்ட, இரண்டாம் மொழி 150 மணித்தியாலய தமிழ்மொழி பாடநெறியை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று 27.06.2022 பதுளை மாவட்ட செயலகத்தில் பதுளை மாவட்ட தேசிய ஒருமைப்பாட்டு மேம்பாட்டு உத்தியோகத்தர் முஷரப் தலைமையில் பதுளை மாவட்டத்தைச் சேர்ந்த 154 சிங்கள மொழிமூல அரச உத்தியோகத்தர்களுக்கு தமிழ்மொழி பாடநெறியை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது .

தமிழ்மொழி கற்கை நெறியினை வெற்றிகரமாக பூர்த்தி செய்த அரச உத்தியோகத்தர்களிற்கு அரச கரும மொழிகள் திணைக்களத்தின் சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் இக்கற்கை நெறியானது 150 மணித்தியாலயங்கள் கொண்டதுடன் 12 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.