;
Athirady Tamil News

உண்மையை பேசுபவர்களுக்கு எதிராக மத்திய அரசு தனது அமைப்புகளை பயன்படுத்துகிறது – மம்தா பானர்ஜி..!!

0

மகாராஷ்டிரா மாநில எம்.பி.யும், சிவசேனா செய்தித் தொடர்பாளருமான சஞ்சய் ராவத், நிலமோசடி வழக்கில் விசாரணைக்கு நாளை நேரில் ஆஜராகும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இந்நிலையில், உண்மையைப் பேசுபவர்களுக்கு எதிராக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை மத்திய அரசு பயன்படுத்துகிறது என மம்தா பானர்ஜி தொிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் கூறியதாவது: இன்று மகாராஷ்டிராவில் சிவசேனா தலைவா் சஞ்சய் ராவத்திற்கு அமலாக்கத் துறையால் சம்மன் அனுப்பபட்டுள்ளது. பா.ஜ.க. ஏன் சாதாரண மக்களை இப்படி துன்புறுத்துகிறது. இதுதான் ஜனநாயகத்தை நடத்துவதற்கான வழியா? பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு உண்மையைப் பேசும் மக்களுக்கு எதிராக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை போன்ற மத்திய அமைப்புகளை பயன்படுத்துகிறது. இதனால் கடந்த சில ஆண்டுகளில் தொழிலதிபா்கள் உள்ளிட்ட பல லட்சம் மக்கள் நாட்டை விட்டு வெளியேறி உள்ளனா். இதனை பாஸ்போா்ட் மற்றும் விசா அலுவலகங்களில் இதை சரிபாா்க்கலாம் என தொிவித்தாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.