;
Athirady Tamil News

மும்பை கட்டிட விபத்து – பலி எண்ணிக்கை 14 ஆக அதிகரிப்பு..!!

0

மகாராஷ்டிரா மாநிலத்தின் குர்லாவின் கிழக்கு பகுதியில் உள்ள நாயக் நகரில் 4 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த கட்டிடம் நேற்றிரவு திடீரென இடிந்து விழுந்தது. தகவலறிந்து தீயணைப்புப் படையினரும், போலீசாரும் சம்பவ இடம் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய 20க்கும் மேற்பட்டோரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைத்தனர். மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் 3 பேர் பலியானார்கள்என்றும், மேலும் பலர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியானது. இந்நிலையில், குர்லா கட்டிட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 13 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.