;
Athirady Tamil News

ராஜஸ்தானில் கொடூரம் – தையல் தொழிலாளி தலையை துண்டித்து வீடியோ வெளியீடு..!!

0

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் கண்ணையா லால் என்பவர் தையல் கடை நடத்தி வந்தார். அவரது கடையில் இன்று அத்துமீறி புகுந்த 2 பேர் அங்கு வேலை செய்து கொண்டிருந்த கண்ணையா லாலை வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று பொது இடத்தில் வைத்து தலையை துண்டித்தனர். இதுதொடர்பான வீடியோவையும் வெளியிட்டனர். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. விசாரணையில், சர்ச்சையில் சிக்கிய பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மாவிற்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்து வெளியிட்டதால் கண்ணையா லால் படுகொலை செய்யப்பட்டதாக தெரிய வந்தது. இந்தக் கொடூர சம்பவம் ராஜஸ்தானில் காட்டுத்தீயாக பரவியதால் அங்கு கடையடைப்பு , வாகனங்களுக்கு தீ வைப்பு போன்ற, வன்முறை சம்பவங்கல் நடைபெற்றன. மாநிலம் முழுவதும் பதற்றம் நிலவுவதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு அப்பகுதியில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.