;
Athirady Tamil News

தனது இரண்டு பிள்ளைகளுடன் தற்கொலைக்கு முயன்ற தாய்!!

0

தாய் ஒருவர் தனது இரண்டு பிள்ளைகளுடன் சந்திரிகா குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

தாய் தனது 5 வயது மகள் மற்றும் 11 வயது மகனுடன் சந்திரிகா குளத்தில் குதித்துள்ளார்.

சம்பவத்தில் 5 வயது மகள் உயிரிழந்துள்ளதுடன், 11 வயது மகன் காப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தின் காரணமாக கவலைக்கிடமான நிலையில் உள்ள தாய் எம்பிலிபிட்டிய பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த தாய் சூரியவெவ பிரதேசத்தில் வசிப்பவர் எனவும், அவரிடம் இருந்து 2000 ரூபா பணமும் கையடக்கத் தொலைபேசியும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.