;
Athirady Tamil News

’அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியது’ !!

0

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக வந்த அரசாங்கம் தற்போது அந்த வாக்குறுதியை நிறைவேற்ற தவறியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (1) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பை பலப்படுத்துவதே பிரதான யோசனையாக மொட்டு கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தில் குறிப்பிடப்பட்டது.

எனினும் தற்போது வரை 3 ஆண்டுகாலமாக தேசிய பாதுகாப்புக்கு என்ன நடந்திருக்கிறது என மக்களுக்கு தெரிந்திருக்கிறது.

இந்த நிலையில் 2019ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது தலைவர்கள் கூறிய தேசிய பாதுகாப்புக்கு என்ன நடந்துள்ளது என்றும் தற்போது நாட்டில் தேசிய பாதுகாப்பு இருக்கின்றதா? என்றும் அரசாங்கத்திடம் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கேள்வி எழுப்பியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.