;
Athirady Tamil News

ரூ.4.7 கோடி பெறுமதியான தங்கம் சிக்கியது !!

0

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 47 மில்லியன் ரூபாய் பெறுமதியான 16 தங்க பிஸ்கட்கள் மற்றும் 4 தங்கக் துண்டுகள் என்பன கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், நபரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

துபாயில் இருந்து இன்று அதிகாலை 1 மணியளவில் கொண்டுவரப்பட்ட 2 கிலோ கிராம் 98 கிராம் நிறையுடைய தங்கமே கைப்பற்றப்பட்டுள்ளது.

சுங்க விசாரணையை பிரதி சுங்கப் பணிப்பாளர் விஜேரத்ன பண்டார மேற்கொண்டதுடன், சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட தங்கத்தை பறிமுதல் செய்ய உத்தரவிட்டார்.

கைதுசெய்யப்பட்ட தெமட்டகொட பிரதேசத்தை சேர்ந்த 35 வயதான நபரை 50,000 ரூபாய் அபராதம் செலுத்தவும் பிரதி சுங்கப் பணிப்பாளர் உத்தரவிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.