;
Athirady Tamil News

பஞ்சாப்பில் இந்திய எல்லைக்கு வழி தவறி வந்த பாகிஸ்தான் சிறுவன்..!!

0

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் இடையே உள்ள சர்வதேச எல்லையான பெரோஸ்பூர் செக்டார் பகுதியில் சிறுவன் ஒருவன் அழுது கொண்டிருந்தான். இதை பார்த்த இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் அச்சிறுவனை மீட்டனர். பாகிஸ்தானை சேர்ந்த 3 வயது சிறுவனான அவன் வழி தவறி சர்வதேச எல்லைக்கு வந்தது தெரிந்தது. இதுகுறித்து இந்திய பாதுகாப்பு படையினர் பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சிறுவனை அவனது தந்தை மற்றும் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.