;
Athirady Tamil News

CEYPETCO க்கான எரிபொருள் வருகிறது !!

0

CEYPETCOவினால் கொள்வனவு செய்யப்பட்ட 40,000 மெட்ரிக் தொன் டீசல் ஏற்றிக்கொண்ட கப்பல், ஜூலை 8 அல்லது 9 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளது என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

ஜூலை 11-14 ஆம் திகதிகளுக்கு இடையிலும் 22-23 ஆம் திகதிகளுக்கு இடையிலும் பெட்ரோல் வருகின்றது.

மற்று​மொரு தொகுதி டீசல், ஜூலை 22-23 ஆம் திகதிகளுக்கு இடையில் எதிர்பார்க்கப்படுகின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.