;
Athirady Tamil News

ஜெக்சன் என்டனி கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றம்!!

0

அனுராதபுரம் தலாவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்து சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ஜெக்சன் என்டனி மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தலாவ மொரகொட பிரதேசத்தின் ஏழாம் தூண் பகுகிக்கு அருகில் நேற்றிரவு (02) ஜெக்சன் என்டனி பயணித்த கெப் வண்டி ஒன்று காட்டு யானையுடன் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் வாகனத்தில் பயணித்த ஜெக்சன் என்டனி மற்றும் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் ஜெக்சன் என்டனியின் சகோதரரும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தினால்இ யானை வண்டியின் மீது விழுந்துஇ கெப் பலத்த சேதமடைந்துள்ளது..

காயமடைந்த ஜெக்சன் என்டனியின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என மருத்துவமனை பேச்சாளர் தெரிவித்தார்.

கல்கமுவ பிரதேசத்தில் படப்பிடிப்பொன்றை முடித்துவிட்டு தங்குமிடத்திற்காக அனுராதபுரம் திரும்பும் போது விபத்துக்குள்ளானதாக ´அத தெரண´ செய்தியாளர் குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.