;
Athirady Tamil News

கோட்டாபாய விலகிய பின்னர்…? அரசியலமைப்பு கூறுவது இதுதான் !!

0

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 13ஆம் திகதி தனது பதவியை இராஜினாமாச் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இவர், கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் திகதி ஜனாதிபதியாகிய நிலையில் தற்போது அவருடைய பதவிக்காலம் 2ஆண்டுகளும் 7மாதங்களும் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில் நிறைவுக்கு வரவுள்ளது.

இவ்வாறு ஜனாதிபதியொருவர் தனது பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னதாக விலகினால் அடுத்த நடைமுறை என்னவென்பது குறித்து 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் 40ஆவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், மக்களால் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதி பதவியானது பதவிக்காலம் முடிவதற்குள் வெற்றிடமாகும்போது 40ஆவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி ஒரு சிறப்பு நடைமுறை பின்பற்றப்பட வேண்டும்.

அதன்படி ஜனாதிபதியின் வெற்றிடமான பதவியை நிரப்புவதற்கு, ஜனாதிபதி பதவி விலகிய ஒரு மாதத்திற்குள் பாராளுமன்றம் அதன் உறுப்பினர்களில் ஒருவரை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்க வேண்டும்.

அதேநேரம், ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்தால், ஜனாதிபதி இராஜினாமா செய்த மூன்று நாட்களுக்குள் பாராளுமன்றம் கூட வேண்டும்.

அத்தகைய கூட்டத்தில், ஜனாதிபதியின் இராஜினாமா குறித்து பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் பாராளுமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும் மற்றும் காலியாக உள்ள ஜனாதிபதி பதவிக்கான வேட்புமனுக்களை பெறுவதற்கான திகதியை நிர்ணயிக்க வேண்டும்.

ஒரு பாராளுமன்ற உறுப்பினர் மட்டுமே ஜனாதிபதியின் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டால், அந்த நபர் அந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதாக செயலாளர் நாயகத்தால் அறிவிக்கப்படுவார்.

ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் பரிந்துரைக்கப்பட்டால், இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, அறுதிப் பெரும்பான்மை வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல்கள் பற்றி 1981ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டமானது, பாராளுமன்றத்தால் புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளைக் குறிப்பிடுகிறது.

அதனடிப்படையில், ஜனாதிபதியின் அலுவலகம் வெற்றிடமாகி புதிய ஜனாதிபதி பதவியேற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், தற்போதைய பிரதமர் பதில் ஜனாதிபதியாக செயற்படுகிறார்.

இந்த காலகட்டத்தில், அமைச்சரவையின் அமைச்சர்களில் ஒருவர் பிரதமரின் அலுவலகத்தில் செயற்படுவதற்காக நியமிக்கப்படுவார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி மீதமுள்ள காலத்திற்கு பதவியில் இருக்க முடியும்.

இவ்வாறான நிலையில், ஜனாதிபதி கோட்டாபய தனது பதவியை இராஜினாமா செய்யும் பட்சத்தில், ஒருமாத காலத்திற்குள் புதிய ஜனாதிபதியை பாராளுமன்றம் கூடித்தெரிவு செய்யும் வரை ரணில் விக்கிரமசிங்க தற்காலிக ஜனாதிபதியாக பதவியேற்பார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் பதவி விலகுமாறு கட்சித்தலைவர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் அழுத்தம்பிரயோகித்து வருகின்றனர். ஜனாதிபதி விலகிய பின்னர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பதவி விலகினால் தற்போதைய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார்.

அரசியலமைப்பில் அதற்கான ஏற்பாடுகள் காணப்படுகின்றன. எனினும், சர்வகட்சி இடைக்கால அரசாங்கம் உருவாக்கப்படவுள்ளதாயின், அந்த அரசாங்கம் உருவாக்கப்படும் வரையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலகாது இருப்பாராயின் அவரே தற்காலிக ஜனாதிபதியாக கடமைகளை பொறுப்பேற்கத் தகுதியானவர் ஆகின்றார்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

உறுதுணையாக இந்தியா தொடர்ந்து செயற்படும் !!

தீயின் பின்னணியில் இருப்பவர்களை அம்பலப்படுத்துவோம்!! (வீடியோ)

CID வசமாகும் விசாரணைகள் !! (வீடியோ)

ஜனாதிபதி மாளிகையிலிருந்து கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது !! (வீடியோ)

எதிர்ப்பினால் தேரர் வெளியேறினார்!! (வீடியோ)

ஜனாதிபதி அதிரடி பணிப்பு !! (வீடியோ)

பிரதமரின் வீட்டுக்கு தீ; மூவர் கைது !! (வீடியோ)

சவேந்திர சில்வாவின் கோரிக்கை !! (வீடியோ)

ஆள விடுங்க சாமி! மேலும் 2 அமைச்சர்கள் ராஜினாமா.. கவிழும் இலங்கை அரசு!! (வீடியோ படங்கள்)

ஜனாதிபதி மாளிகையில் பதுங்கு குழிக்குள், இரகசிய அறை !! (வீடியோ)

ராஜபக்ஷக்களை துரத்தும் 9 ஆம் இலக்கம் !! (வீடியோ)

தீ வைக்கப்பட்ட பிரதமரின் வீடு தொடர்பில் முக்கிய தகவல்கள் !! (வீடியோ)

மேலும் 2 அமைச்சர்கள் ராஜினாமா!! (வீடியோ)

புதனன்று விலகுகிறார் கோட்டா !! (வீடியோ)

சபாநாயகர் ஊடக பிரிவு வௌியிட்டுள்ள அறிவிப்பு!! (வீடியோ)

“ரணில்” வீடு முன் ரணகளம்.. பிரதமர் பதவி விலகியும் விடாத இலங்கை மக்கள் – தொடரும் போராட்டம்!! (வீடியோ படங்கள்)

வெகுண்டெழுந்த இலங்கை மக்கள்… பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே வீட்டுக்கு தீ வைப்பு – பெரும் பதற்றம்!! (வீடியோ படங்கள்)

வன்முறை தீர்வாகாது: சுமந்திரன் கண்டனம் !! (வீடியோ)

ரணிலின் வீட்டுக்கு தீ வைப்பு!! (வீடியோ)

பிரதமரின் வீட்டை நோக்கி மக்கள் படை !! (வீடியோ)

இனி என்னவாகும் இலங்கை.. அடுத்த அதிபர் “மகிந்தவா?” அனைத்துக் கட்சிகள் எடுத்த 4 முக்கிய முடிவுகள்!! (வீடியோ படங்கள்)

அதிபர் கோட்டாபய ராஜபக்‌ஷே பதவி விலகனும்.. இலங்கை அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு!! (வீடியோ படங்கள்)

அதிபர் மாளிகை மட்டுமில்ல.. ஊடகங்களுக்கும் குறி! அட்டாக் மோடில் இலங்கை மக்கள்!! (வீடியோ, படங்கள்)

கோட்டாவுக்கு 24 மணி நேரம் காலக்கெடு !! (வீடியோ)

பிரதமர் விக்கிரமசிங்கவின் இல்லத்துக்கு அருகில் திரண்ட போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம்!!! (வீடியோ)

பந்துல குணவர்தன இராஜினாமா !! (வீடியோ)

ஜனாதிபதி மாளிகையில் இராப்போசனம்!! (வீடியோ)

பிரதமர் ரணில் பதவி விலக தயார்!! (வீடியோ)

அடுத்த ஜனாதிபதி யார் தெரியுமா? (வீடியோ)

நாடே கொந்தளிப்பு.. இலங்கை-ஆஸி டெஸ்ட் போட்டி.. மைதானத்துக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் – பதற்றம்! (வீடியோ படங்கள்)

போராட்டத்துக்குப் போன இடத்தில் ‘நீராடல்’.. அதிபர் மாளிகை நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்ட இளைஞர்கள்!! (வீடியோ படங்கள்)

“போராட்டம் கையை மீறி செல்லும்..” எச்சரித்த உளவுத்துறை! நள்ளிரவில் எஸ்கேப் ஆன கோட்டாபய ராஜபக்ச!! (வீடியோ படங்கள்)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பதவி விலக வேண்டும் -கட்சித் தலைவர்கள்!! (வீடியோ)

42 பேர் காயம்: மூவரின் நிலை கவலைக்கிடம் !! (வீடியோ)

முக்கியஸ்தர்களுடன் இரண்டு கப்பல்கள் பறந்தன!! (வீடியோ)

​அவசர அழைப்பு விடுத்தார் பிரதமர் ரணில் !! (வீடியோ, படங்கள்)

இருவரின் நிலை கவலைக்கிடம் !! (வீடியோ)

கோட்டா தப்பியோட்டமா? (வீடியோ)

கோட்டா தப்பியோட்டம்: கண்டியில் தேடுதல் !!! (வீடியோ)

போராட்டத்தில் இணைந்த பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரி !! (வீடியோ)

அவசர செய்தி: 23 பேர் காயம்!! (வீடியோ)

கோட்டையில் துப்பாக்கிச் சூடு !!

ஜனாதிபதி மாளிகை முன்றல், நீர்த்தாரை வாகனத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் கைப்பற்றினர்!! (வீடியோ)

ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த மக்கள் !! (வீடியோ)

கொழும்பில் பதற்றம் பலர் காயம் !!

தலைக்கவசத்தை கழற்றி வீசி பேரணியில் இணைந்த பொலிஸ் !! (படங்கள்)

போராட்டங்களை நிதானமாக கையாள வேண்டும்: ஐ.நா. !!

காலிமுகத்திடலில் பொலிஸார் குவிப்பு !!

ஊரடங்கு தொடர்பில் வெளியான தகவல் !!

ஊரடங்கை மீளப்பெறுக: மனித உரிமை ஆணைக்குழு !!!

வழமைபோன்று இ.போ.ச பஸ் சேவைகள் !!

புகையிரத சேவை இடைநிறுத்தம் !!

சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்படமாட்டாது!!

பொலிஸ் ஊரடங்கு என ஒன்று சட்டத்தில் இல்லை – சுமந்திரன்!!

நாளை டேட்டா சேவைகள் முடங்கலாம்?

மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல் !!

ஜனாதிபதி பதவி விலக வேண்டும் – பெரும்பான்மையும் கேள்விக்குறி! (வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.