;
Athirady Tamil News

வெளிநாட்டுக்கு தப்பியோடிய இலங்கை அதிபர் கோத்தபய!!

0

நாடுமுழுவதும் வன்முறை தீவிரமடைந்து விட்டதால் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்டார். இதையடுத்து நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட் டுள்ளது. இடைக்கால அதிபராக தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியமனம் செய்யப் பட்டுள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் கடந்த மார்ச் முதல் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிபர் கோத்தபய அரசுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்திய அவர்கள், கடந்த 4 நாட்களுக்கு முன்பு அதிபர் மாளிகைக்குள் நுழைந்து அதை ஆக்கிரமித்தனர்.

அதற்கு முன்பாகவே அதிபர் மாளிகையை விட்டு வெளியேறிய கோத்தபய, கொழும்பு சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள ராணுவ தலைமையிடத்தில் பாதுகாப்பாக இருந்ததாக தெரிகிறது.

மக்களின் போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து, அதிபர் பதவியை 13-ம் தேதி ராஜினாமா செய்வதாக கோத்தபய அறிவித்தார். இதையடுத்து, கூட்டணி அரசை அமைப்பதற்கான நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் துரிதப்படுத் தின. நாட்டின் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 20-ம் தேதி நடக்கும் என்றும் எதிர்க்கட்சிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அறிவித்தபடி கோத்தபய தனது ராஜினாமா கடிதத்தை நேற்று அளிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் ராஜினாமா கடிதம் எதையும் வழங்காமல் ரகசியமாக நேற்று மாலத்தீவுக்கு தப்பியோடி விட்டார். அவர், மனைவி மற்றும் 2 பாதுகாவலர்களுடன் இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானத்தில் மாலத்தீவு தலைநகர் மாலே நகருக்கு தப்பிச் சென்றதாக இலங்கை குடியுரிமை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நேற்று அதிகாலை மாலே நகரை அடைந்து விட்டதாகவும், அங்கு பாதுகாப்பான இடத்தில் தங்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மாலத்தீவு நாட்டு ராணுவ அதிகாரிகள் அவரை, அங்குள்ள ரகசியத் தீவு ஒன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும், அந்த தீவில் உள்ள மாளிகையில் கோத்தபயவும், அவரது மனைவியும் தங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. இலங்கையில் இருந்து தப்பிச் செல்ல அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் உதவி செய்ய மறுத்த நிலையில், அவர் மாலத்தீவுக்கு தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில், கோத்தபய மாலத்தீவில் இருக்கிறாரா என்ற விவரத்தை வெளியிட அந்நாடு மறுத்துவிட்டது.

இதனிடையே,இலங்கையில் பதற்றம் நீடித்து வருகிறது. நாட்டின் சில மாகாணங்களில் போராட்டம், வன்முறை தீவிரம் அடைந்துள்ளது. கொழும்புவில் உள்ள பிரதமர் அலுவலகத்தையும் போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். அவர்கள் வன்முறையில் ஈடுபட்டதால் போராட்டத்தைக் கலைக்க போலீஸாரும், ராணுவ வீரர்களும் கண்ணீர் புகைகுண்டுகளை வீசினர். இதனால், இலங்கையில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் நேற்று தெரிவித்துள்ளது. இதுகுறித்து பிரதமர் அலுவலகம் தரப்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘அதிபர் நாட்டில் இருந்து வெளியேறிவிட்டதால் ஏற்பட்டுள்ள நிலைமையை சமாளிக்கவும், போராட்டக்காரர்களை கட்டுக்குள் கொண்டு வரவும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் அறிவிப்பு: மாலத்தீவில் தஞ்சமடைந்த நிலையில், ரணில் விக்ரமசிங்கவை இடைக்கால அதிபராக கோத்தபய நியமித்துள்ளார். இதை தன்னிடம் கோத்தபய தெரிவித்ததாக சபா நாயகர் யாபா அபேவர்த்தனா கூறினார். மேலும், கோத்தபயவிடம் இருந்து விரைவில் ராஜினாமா கடிதத்தை பெற்றுவிடுவேன் என்றும் யாபா அபேவர்த்தனா தெரிவித்தார்.

வரும் 20-ம் தேதி புதிய அதிபர் தேர்வு செய்யப்பட்டவுடன் இடைக்கால அதிபர் பதவியில் இருந்து விலகுவேன் என்று ரணில் தெரிவித்துள்ளார். ரூபவாஹிணி தொலைக்காட்சி மூலம் மக்களிடம் பேசிய ரணில், “ஜனநாயகத்துக்கு எதிரான பாசிச அச்சுறுத்தலை நாம் முடிவுக்கு கொண்டு வரவேண்டும். அரசின் சொத்துகளை அழிப்பதை அனுமதிக்க முடியாது. அதிபர் மாளிகை, அதிபர் அலுவலகம், பிரதமர் மாளிகையை மீட்க வேண்டும். சில முக்கிய அரசியல் தலைவர்கள் தீவிரவாதிகளுக்கு ஆதரவளிப்பதாக தெரிகிறது. சட்டம் – ஒழுங்கை நிலைநாட்டத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க ராணுவத் தளபதிகள், காவல்துறை தலைவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது” என்றார்.

இதனிடையே, நேற்று மாலை கொழும்புவில் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடந்தது. அதில் இடைக்கால அதிபராக நியமிக்கப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்க பதவி விலக வேண்டும் என்றும், நாடாளுமன்ற சபாநாயகர் இடைக்கால அதிபராக செயல்பட வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.

டி.வி. நிலையம் முற்றுகை: முன்னதாக இலங்கை அரசு தொலைக்காட்சியான ரூபவாஹிணி அலுவலகத்துக்குள் போராட்டக்காரர்கள் புகுந்து ரகளையில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் ஒளிபரப்பு தடைபட்டது. போலீஸார் வந்து போராட்டக்காரர்களை அப்புறப்படுத்திய பின்னர் நிகழ்ச்சிகள் மீண்டும் ஒளிபரப்பு செய்யப்பட்டன.

இந்தியா மறுப்பு: அதிபர் கோத்தபய ராஜபக்ச மாலத்தீவு தப்பிச் செல்ல இந்தியா உதவி செய்ததாக இலங்கையைச் சேர்ந்த சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கு இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘அதிபர் கோத்தபய ராஜபக்ச இலங்கையை விட்டு வெளியேறுவதற்கு இந்தியா உதவியது என்பது யூகத்தின் அடிப்படையிலான செய்தியாகும். இதை இந்தியா திட்டவட்டமாக மறுக்கிறது. இலங்கை மக்களின் முன்னேற்றத்துக்கு,அவர்களின் கனவுகளை நனவாக்க இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும்’ என கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டிருப்பதால் அங்கு செல்ல வேண்டிய விமானங்கள் கேரளாவில் உள்ள திருவனந்தபுரம், கொச்சி விமான நிலையங்களை பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாக மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா தெரி வித்தார்.

மாலத்தீவில் போராட்டம்: இந்நிலையில், மாலத்தீவில் தஞ்சமடைந்துள்ள கோத்தபயவை வெளியேற்றக்கோரிஅந்நாட்டு அதிபர் அலுவலகம் முன்பு நேற்று போராட்டம் நடத்தப்பட்டது. கோத்தபயவுக்கு அடைக்கலம் கொடுக்க எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் நடந்தது. குறிப்பாக, மாலத்தீவு அதிபர் இப்ராஹிமின் மாளிகை அருகே மாலத்தீவு மக்களும், இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்தவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராணுவத்துக்கு அஞ்சாத மக்கள்!! (படங்கள்)

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு நீக்கம் !!

துப்பாக்கி, தோட்டாக்களை கைப்பற்றிய போராட்டக்காரர்கள்!!

கோட்டாபய ராஜினாமா கடிதம் கிடைக்கவில்லை – மஹிந்த யாப்பா!!

இலங்கை திருச்சபை விடுத்துள்ள அறிவிப்பு !!

சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்பட வேண்டும்: ஜுலி சங் !!

அதிபர் கோத்தபய ராஜபக்ச இலங்கையை விட்டு வெளியேறுவார் என நினைக்கவில்லை – ஜெயசூர்யா!!

‘‘ராஜினாமா கடிதம் அனுப்புகிறேன்’’- சபாநாயகரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட கோத்தபய: விவரங்களை வெளியிட மாலத்தீவு மறுப்பு!!

பொதுமக்களின் பாதுகாப்புக்கு பெரும் ஆபத்து! மகாநாயக்க தேரர்கள்!!

ஜனநாயகத்திற்கு எதிரான ஃபாசிச அச்சுறுத்தலை நிறுத்த வேண்டும் – ரணில்!! (படங்கள்)

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலத்தீவுக்கு தப்பிச் சென்றது ஏன்? (படங்கள்)

இலங்கையில் நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்ற மக்கள் மீது நூற்றுக்கணக்கான கண்ணீர் புகைகுண்டு வீச்சு!! (படங்கள்)

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு நடைமுறை! வெளியானது வர்த்தமானி !!

களமிறங்குகிறதா ராணுவம்? இலங்கையில் உச்சக்கட்ட பதற்றம் – சரத் பொன்சேகா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! (படங்கள்)

பாராளுமன்றத்துக்கு முன்பாக போராட்டம்; ’ரணிலின் கேம்’ !!

சபாநாயகர் இல்லத்திற்கு முன் பதற்றநிலை!

அதிவிசேட வர்த்தமானி வெளியானது !!

புதிய பிரதமரை நியமிக்குமாறு ரணில் கோரிக்கை !!

சிங்கப்பூர் சென்றதும் இராஜினாமா?

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை !!

அதிரடியான தீர்மானத்தை எடுத்த கட்சித் தலைவர்கள்!!

கட்சித் தலைவர்களால் கோரிக்கை நிராகரிப்பு !!

சபாநாயகர் அதிரடி அறிவிப்பு !!

ரணிலின் உத்தரவுகளை ஏற்க வேண்டாம் – பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா!!

பாராளுமன்றத்தை கைப்பற்ற முயற்சி: கண்ணீர்ப்புகை தாக்குதல் !! (வீடியோ)

மாலைதீவு பொலிஸாரால் இலங்கை பிரஜை கைது!! (வீடியோ)

மாலத்தீவில் அகதியாக கோத்தபாய- வெளியேற்ற வலியுறுத்தி தலைநகர் மாலேவில் இலங்கை மக்கள் போராட்டம்!! (படங்கள், வீடியோ)

அரசாங்கம் அடக்குமுறையை ஆரம்பித்துள்ளது!!

மக்களிடம் சவேந்திர சில்வா விடுத்துள்ள வேண்டுகோள்!!

சபாநாயகர் கட்சி தலைவர்களுக்கு விடுத்துள்ள அவசர அழைப்பு!!

பதில் ஜனாதிபதியின் விஷேட அறிவிப்பு (காணொளி)

மற்றுமோர் அறிவிப்பை விடுத்தார் மஹிந்த !!

’ரணிலின் சட்டத்தை நாய் கூட மதிக்காது’ !!

பிரதமர் அலுவலகமும் போராட்டக்காரர்கள் வசம் (Video)

மாலைத்தீவிலிருந்தும் பறந்த கோட்டா!!

ஏமாற்றினார் மஹிந்த !!

’ரணிலின் பதவிப் பேராசைக்காக நாட்டை பலிகொடுக்க வேண்டாம்’ !!

பதில் ஜனாதிபதியான பிரதமர் நியமனம்!!

சடசடவென துப்பாக்கிச் சூடு !!

ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் இன்னும் கிடைக்கவில்லை!!

கொழும்பு வானில் வட்டமிடும் ஹெலிகள் !! (வீடியோ)

மேல் மாகாணத்திற்கு ஊரடங்கு; நாடளாவிய ரீதியில் அவசரகாலச் சட்டம் !!

அமெரிக்க தூதரகம் அவசர அறிவிப்பு !!

பதில் ஜனாதிபதி நியமிக்கவில்லை: மஹிந்த !!

பிரதமர் அலுவலகத்துக்கு முன் பதற்றம் !!

இந்தியா மறுத்தது !!

பிரதமர் அலுவலகமும் உறுதிப்படுத்தியது !!

கோட்டா வெளியேற்றம்; விமானப்படை விளக்கம் !!

விமானப்படை விமானத்தில் பறந்தார் கோட்டா !!

பேராசைப் பிடித்த ரணில் பதவி விலகுவார் என எதிர்பார்க்க முடியாது !!

கோட்டாவின் கோரிக்கை: நிராகரித்தது அமெரிக்கா !!

கோட்டா தப்பியோட முயன்றாரா?

எதிர்க்கட்சிகளால் செய்ய முடியாததை மக்கள் செய்துள்ளனர்!! (வீடியோ)

ரணிலை ஜனாதிபதியாக நியமிக்க தீர்மானம் !!

பிரதமர் பதவியை தமிழர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடாது !!

பிரதமரின் ஊடகப் பிரிவிலுள்ள சில பொருள்கள் மாயம் !!

இராஜினாமா கடிதத்தில் கையெழுத்திட்ட ஜனாதிபதி !!

விமான நிலையத்தில் பசில் ராஜபக்சவுக்கு ஏற்பட்ட நிலை!! (வீடியோ)

கட்சி தலைவர்களுடன் போராட்டக்காரர்கள் சந்திப்பு !!

அலரிமாளிகை மோதல்; 10 பேர் வைத்தியசாலையில் !!!

ரணில் விக்ரமசிங்கவின் ஜனாதிபதி கனவு பலிக்குமா?

ஜனாதிபதி நாட்டில் உள்ளார் – முப்படை தளபதிகளை சந்தித்துள்ளார்!!

கோட்டா தொடர்பான கதையை மறுத்தார் மஹிந்த !!

ஜனாதிபதி பதவிக்கு சஜித் பிரேமதாஸவை நியமிக்க ஏகமனதாக தீர்மானம்!!

மத்திய வங்கியின் ஆளுநரின் முக்கிய அறிவிப்பு!!

ஹெல்மட்டை வீசிய அதிகாரி ஆயுதத்துடன் கைது !!

புதிய ஜனாதிபதி தெரிவுக்கு : 20 ​ஆம் திகதி வாக்கெடுப்பு !!

வெளிநாட்டில் இருக்கிறார் கோட்டா !!

முக்கிய அறிவிப்பை வெளியிட்டார் ரணில்!! (வீடியோ)

கட்சித் தலைவர்கள் அதிரடி தீர்மானம் !!

கோட்டாவின் செய்திகளை மஹிந்த வெளியிடுவார் !!

சுமந்திரன் பிரதமரானல் வரவேற்பேன் – க.வி.விக்னேஸ்வரன்!!

அனைத்து அமைச்சர்களும் பதவி விலக தீர்மானம்!!!

ஜனாதிபதியாக சஜித்?

இன்று தீர்மானம் மிக்க கட்சித் தலைவர்கள் கூட்டம் !!

இலங்கையில் இந்திய படையினர்: இந்தியா மறுப்பு !!

பதவி விலகல்; பிரதமருக்கு ஜனாதிபதி விசேட அறிவிப்பு !!

ராஜபக்ஷவினர் வேண்டுகோள் விடுக்கும் பட்சத்தில் இந்திய இராணுவத்தை அனுப்பத் தயார் – சுப்பிரமணியன் சுவாமி!!

மைத்திரி முன்வைத்துள்ள 10 யோசனைகள் !!

ஜனாதிபதி மாளிகை பணம் குறித்து பொலிஸார் அறிக்கை!!

கோட்டாபாய விலகிய பின்னர்…? அரசியலமைப்பு கூறுவது இதுதான் !!

உறுதுணையாக இந்தியா தொடர்ந்து செயற்படும் !!

தீயின் பின்னணியில் இருப்பவர்களை அம்பலப்படுத்துவோம்!! (வீடியோ)

CID வசமாகும் விசாரணைகள் !! (வீடியோ)

ஜனாதிபதி மாளிகையிலிருந்து கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது !! (வீடியோ)

எதிர்ப்பினால் தேரர் வெளியேறினார்!! (வீடியோ)

ஜனாதிபதி அதிரடி பணிப்பு !! (வீடியோ)

பிரதமரின் வீட்டுக்கு தீ; மூவர் கைது !! (வீடியோ)

சவேந்திர சில்வாவின் கோரிக்கை !! (வீடியோ)

ஆள விடுங்க சாமி! மேலும் 2 அமைச்சர்கள் ராஜினாமா.. கவிழும் இலங்கை அரசு!! (வீடியோ படங்கள்)

ஜனாதிபதி மாளிகையில் பதுங்கு குழிக்குள், இரகசிய அறை !! (வீடியோ)

ராஜபக்ஷக்களை துரத்தும் 9 ஆம் இலக்கம் !! (வீடியோ)

தீ வைக்கப்பட்ட பிரதமரின் வீடு தொடர்பில் முக்கிய தகவல்கள் !! (வீடியோ)

மேலும் 2 அமைச்சர்கள் ராஜினாமா!! (வீடியோ)

புதனன்று விலகுகிறார் கோட்டா !! (வீடியோ)

சபாநாயகர் ஊடக பிரிவு வௌியிட்டுள்ள அறிவிப்பு!! (வீடியோ)

“ரணில்” வீடு முன் ரணகளம்.. பிரதமர் பதவி விலகியும் விடாத இலங்கை மக்கள் – தொடரும் போராட்டம்!! (வீடியோ படங்கள்)

வெகுண்டெழுந்த இலங்கை மக்கள்… பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே வீட்டுக்கு தீ வைப்பு – பெரும் பதற்றம்!! (வீடியோ படங்கள்)

வன்முறை தீர்வாகாது: சுமந்திரன் கண்டனம் !! (வீடியோ)

ரணிலின் வீட்டுக்கு தீ வைப்பு!! (வீடியோ)

பிரதமரின் வீட்டை நோக்கி மக்கள் படை !! (வீடியோ)

இனி என்னவாகும் இலங்கை.. அடுத்த அதிபர் “மகிந்தவா?” அனைத்துக் கட்சிகள் எடுத்த 4 முக்கிய முடிவுகள்!! (வீடியோ படங்கள்)

அதிபர் கோட்டாபய ராஜபக்‌ஷே பதவி விலகனும்.. இலங்கை அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு!! (வீடியோ படங்கள்)

அதிபர் மாளிகை மட்டுமில்ல.. ஊடகங்களுக்கும் குறி! அட்டாக் மோடில் இலங்கை மக்கள்!! (வீடியோ, படங்கள்)

கோட்டாவுக்கு 24 மணி நேரம் காலக்கெடு !! (வீடியோ)

பிரதமர் விக்கிரமசிங்கவின் இல்லத்துக்கு அருகில் திரண்ட போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம்!!! (வீடியோ)

பந்துல குணவர்தன இராஜினாமா !! (வீடியோ)

ஜனாதிபதி மாளிகையில் இராப்போசனம்!! (வீடியோ)

பிரதமர் ரணில் பதவி விலக தயார்!! (வீடியோ)

அடுத்த ஜனாதிபதி யார் தெரியுமா? (வீடியோ)

நாடே கொந்தளிப்பு.. இலங்கை-ஆஸி டெஸ்ட் போட்டி.. மைதானத்துக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் – பதற்றம்! (வீடியோ படங்கள்)

போராட்டத்துக்குப் போன இடத்தில் ‘நீராடல்’.. அதிபர் மாளிகை நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்ட இளைஞர்கள்!! (வீடியோ படங்கள்)

“போராட்டம் கையை மீறி செல்லும்..” எச்சரித்த உளவுத்துறை! நள்ளிரவில் எஸ்கேப் ஆன கோட்டாபய ராஜபக்ச!! (வீடியோ படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.