;
Athirady Tamil News

பெட்ரோல், டீசல் விலையை குறைத்தது மகாராஷ்டிரா அரசு..!!

0

மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா அதிருப்தி குழு, பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக பொறுப்பேற்ற ஏக்நாத் ஷிண்டே பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பதாக அறிவித்திருந்தார். இந்நிலையில், மாநில அமைச்சரவைக் கூட்டம் மும்பையில் நேற்று நடந்தது. இதில், பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 3 ரூபாயும் குறைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த விலைக் குறைப்பு நள்ளிரவு இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதுதொடர்பாக, துணை முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், மக்களின் நலன் மீது அரசுக்கு உள்ள அக்கறையின் ஒரு பகுதி இது என தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.