;
Athirady Tamil News

நாமல் ராஜபக்ஷவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது ஏன்? ‘வைரல் போட்டோ’ போராட்டக்காரர் கூறுவது என்ன? (படங்கள்)

0

இலங்கையில் அதிகார மையங்களாக விளங்கிய 4 முக்கியமான கட்டடங்களை போராட்டக்காரர்கள் கைப்பற்றிய நிலையில், அதில் முன்வரிசையில் செயல்பட்ட ஒரு போராட்டக்காரர், மஹிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல் ராஜபக்ஷவுடன் இருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரப்பப்பட்டது.

அந்தப் போராட்டக்காரரின் பெயர் டேனிஸ் அலி. புதன்கிழமையன்று பிரதமரின் அலுவலகத்தை முற்றுகையிட்டதிலும் காலி முகத்திடல் மற்றும் அதிபர் மாளிகையில் போராட்டங்களை முன்னெடுத்ததிலும் முக்கியப் பங்காற்றியவர்.

2019, 2020-ஆம் ஆண்டில் அவரும் நாமல் ராஜபக்ஷவும் சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் புதன்கிழமை முதல் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவின. நாமல் ராஜபக்ஷவுடன் அவர் தொடர்பில் இருப்பதாக பலர் விமர்சனம் செய்தார்கள்.

நாமல் ராஜபக்ஷ தரப்பிலும் இந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டன. டேனிஸ் அலி தம்மை முன்பு தம்மைச் சந்தித்ததாகவும் ஆனால் வன்முறைகளுக்கு இடமளிக்கக்கூடாது என்றும் நாமல் ராஜபக்ஷ தரப்பிலான ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து பிபிசி தமிழிடம் டேனிஸ் அலி பேசினார். “நாமல் ராஜபக்ஷவைச் சந்தித்தது புகைப்படம் எடுத்துக் கொண்டது எல்லாம் உண்மைதான். அந்தப் புகைப்படங்கள்தான் இப்போது சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றன”. என்றார் அவர்.

“நான் கால்பந்துடன் தொடர்புடையவன். நாமல் ராஜபக்ஷவுக்கும் கால்பந்தில் ஆர்வம் உண்டு. அவர் அப்போது விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்தார். நான் கால்பந்து தொடர்பான ஊடகம் ஒன்று வைத்திருக்கிறேன். எனது அப்பா, தம்பி ஆகியோர் தேசிய அளவில் விளையாடி இருக்கிறார்கள். நானும் பள்ளி அளவில் கால்பந்து விளையாடி இருக்கிறேன். கால்பந்து தொடர்பான நிகழ்வின்போது விளையாட்டு அமைச்சர் என்ற முறையில் நான் அவரைச் சந்தித்தேன்” என்று டேனிஸ் அலி கூறினார்.

போராட்டக்காரர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இதுபோன்ற தகவல்கள் பரப்பப்படுகின்றன என்று கருதுகிறீர்களா என்று கேட்டபோது, “நான் பிரதமர் அலுவலகத்தில் இருப்பது அவர்களுக்குப் பிரச்னை” என்றார்.

ரூபவாஹினி தொலைக்காட்சி நிலையத்துக்குச் சென்று அதில் மக்களுக்கான நிகழ்ச்சிகளை ஒளிபரப்புங்கள் என்று கூறினோம். ஆனால் அதைக் கைப்பற்றுவது எங்களது நோக்கமல்ல. அதன் பிறகுதான் எனது புகைப்படங்கள் பகிரப்படுகின்றன. என்னை ஒரு தீவிரவாதி போலச் சித்தரிக்க முயற்சிக்கிறார்கள்” என்றார் டேனிஸ் அலி.

அரசுக் கட்டடங்களை விட்டு வெளியேறிய போராட்டக்காரர்கள்

புதன்கிழமையன்று மிகவும் ஆவேசமாக நடந்த போராட்டங்கள் மறுநாளே சற்றுத் தணிந்திருந்தது. அவசரச் சட்டம், ஊரடங்கு ஆகியவை காரணமாக மக்கள் கூட்டம் குறைந்ததாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

பல கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு, 24 மணி நேரத்துக்கும் மேலாக தங்களுடைய கட்டுப்பாட்டில் இருந்த பிரதமர் அலுவலக கட்டடத்தை விட்டு போராட்டக்காரர்கள் வெளியேறினார்கள். இப்போது அது அரசின் கட்டுப்பாட்டில் சென்றிருக்கிறது.

போராட்டக்காரர்களில் ஒரு தரப்பினர் கட்டடங்களை விட்டு வெளியேறுவதற்கு ஆதரவாக இருந்தாலும் மற்றொரு தரப்பினர் அதை ஏற்கவில்லை. கடைசியாக அரசுக் கட்டடங்களை ஒப்படைப்பது என்ற முடிவுக்கு வந்ததாக டேனிஸ் அலி பிபிசியிடம் தெரிவித்தார்.

“தனிப்பட்ட முறையில் எனக்கு இந்தக் கட்டடத்தை விட்டு வெளியேற விருப்பம் இல்லை. ஆனால் ஒட்டுமொத்த முடிவை ஏற்று வெளியேறுகிறோம்” என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

பிரதமர் அலுவலகத்தை விட்டு வெளியேறியபோது பலர் உற்சாகமாக முழக்கங்களை எழுப்பினாலும் சிலர் தயக்கத்துடனேயே வெளியேறினார்கள்.

இதே போல் அலரி மாளிகை எனப்படும் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமும் அரசிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அதிபர் மாளிகையும் இப்போது அரசின் நிர்வாகத்தின் கீழ் வந்திருக்கிறது.

கைப்பற்றப்பட்ட 4 கட்டடங்களை போராட்டக்காரர்கள் ஒப்படைந்திருந்தாலும், காலி முகத் திடல் பகுதியில் இருக்கும் அதிபரின் அலுவலகத்தை மட்டும் இப்போது ஒப்படைப்பதாக இல்லை என்று போராட்டகாரர்கள் அறிவித்திருக்கிறார்கள்.

முக்கிய இலக்கான கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என்பது நடந்துவிட்டது. இன்னும் அவர்களுக்குப் பல கோரிக்கைகள் உண்டு. அதற்காக காலி முகத்திடல் பகுதியில் போராட்டம் வெல்லட்டும் என்ற முழக்கங்கள் அதே உற்சாகத்துடனும் புதிய கொண்டாட்டத்துடனும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

கோட்டாபயவின் பெறுமதியை உணர்வீர்கள்! ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அறிக்கை !!

ஜனாதிபதியின் பதவி விலகல் குறித்து பொதுஜன பெரமுன வெளியிட்ட அறிக்கை!!

பதில் ஜனாதிபதி நியமனம் 7 நாட்களுக்குள் இடம்பெறும்- சபாநாயகர்!!

அடுத்த 7 நாட்களில் புதிய ஜனாதிபதி – சபாநாயகர் !!

பதவி விலகினார் கோட்டா – உத்தியோகப்பூர்வ அறிவிப்பு !!

பதில் ஜனாதிபதியாக ரணில் இன்று பதவி பிரமாணம் !!

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதமருக்கான அறிவிப்பு இன்று !!

ஜனாதிபதியை வெளியேற்றுவதற்காக மாத்திரம் இந்தப் போராட்டம் நடத்தப்படவில்லை – அனுர!!

பதவி விலகல் கடிதம் போலியானது – ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு !!

நிலையான அரசாங்கம் அமைக்கப்படாவிட்டால் நாடு விரைவில் மூடப்படலாம் – மத்திய வங்கியின் ஆளுநர்!!

கையொப்பமிட்ட கடிதத்துக்காக காத்திருக்கும் சபாநாயகர் !!

பிரதமர் பதவிக்கு சஜித்தின் பெயர் பரிந்துரை!!

கோட்டாபய ராஜபக்ச பதவி விலகல்! இலங்கை மக்களுக்கு மாலைதீவு சபாநாயகர் வாழ்த்து!!

கோட்டாபயவின் பதவி விலகல் கடிதம் மின்னஞ்சலில் வந்தது – வல்லுநர்களுடன் சபாநாயகர் ஆலோசனை!!

சிங்கப்பூரில் கோட்டாபய அடைக்கலம் கோரவில்லை – சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு!!

பதவி விலகல் கடிதத்தை அனுப்பினார் கோட்டாபய!

நாடு விட்டு நாடு தாவும் கோட்டாபய.. இப்போது சிங்கப்பூரில் – கொந்தளிக்கும் குடிமக்கள்!! (படங்கள்)

கோட்டாபய வாக்குறுதியளித்தபடி பதவி விலகாமல் தலைமறைவாகியுள்ளார் – சம்பிக்க!!

விசேட அதிரடிப்படையினரின் வசமானது ஜனாதிபதி மாளிகை!!

ஜனாதிபதி பதவியை ஏற்க தயார் – சரத் பொன்சேகா அறிவிப்பு!!

புலிகள் இயக்கத்தை போல போராட்டக்காரர்களை இரண்டாக பிரித்து மோதவிடும் ரணிலின் சதி-எச்சரிக்கும் குரல்கள்!!

தடைப்பட்ட ஜனாதிபதியின் சிங்கப்பூர் பயணம்!!

இலங்கை நெருக்கடி: கோட்டாபய சிங்கப்பூருக்கு செல்வது ஏன்? அவரை பதவி விலக்கு செய்ய சபாநாயகரால் முடியுமா? (படங்கள்)

மாலத்தீவில் இருந்து சிங்கப்பூருக்கு மனைவியுடன் புறப்பட்ட இலங்கை ஜனாதிபதி!! (படங்கள்)

இலங்கையின் அரசியலமைப்பின் படி ஆயுதப் படையினருக்கு அதிகாரம்!!

களமிறங்குகிறதா ராணுவம்? இலங்கையில் உச்சக்கட்ட பதற்றம் – சரத் பொன்சேகா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! (படங்கள்)

கொழும்பில் பரபரப்பு: கொழும்பில் பலப்படுத்தப்படும் பாதுகாப்பு! (படங்கள்)

நாட்டை விட்டு தப்பிச்சென்றிருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ஜித்தாவுக்கு பறக்கிறார்!!

துப்பாக்கிகளை பயன்படுத்தி வன்முறையாக செயற்படக் கூடும்! இராணுவப் பேச்சாளரின் பகிரங்க எச்சரிக்கை!!

மாலைதீவில் இருந்து சிங்கப்பூருக்கு பயணமானார் கோட்டாபய!

சபையை நாளைக்கு கூட்டுவதில் சிக்கல் !!

முக்கிய இடங்களை கையளிக்க தீர்மானம் – போராட்டக்காரர்கள்!!

மீண்டும் ஊரடங்கு !!

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு விசேட அறிவித்தல்!!

இராஜினாமா கடிதத்தை கையளிக்காவிட்டால் சட்டநடவடிக்கை – சபாநாயகர் !!

தரையிறங்கியது தனியார் ஜெட் விமானம் !!

மாலத்தீவில் வலுக்கும் எதிர்ப்பு: சிங்கப்பூருக்கு தப்பிச் செல்கிறார் கோத்தபய!!

கோட்டாபயவின் கையெழுத்தின்றி இணையங்களில் பகிரப்படும் பதவி விலகல் கடிதம்!!

வெளிநாட்டுக்கு தப்பியோடிய இலங்கை அதிபர் கோத்தபய!!

ராணுவத்துக்கு அஞ்சாத மக்கள்!! (படங்கள்)

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு நீக்கம் !!

துப்பாக்கி, தோட்டாக்களை கைப்பற்றிய போராட்டக்காரர்கள்!!

கோட்டாபய ராஜினாமா கடிதம் கிடைக்கவில்லை – மஹிந்த யாப்பா!!

இலங்கை திருச்சபை விடுத்துள்ள அறிவிப்பு !!

சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்பட வேண்டும்: ஜுலி சங் !!

அதிபர் கோத்தபய ராஜபக்ச இலங்கையை விட்டு வெளியேறுவார் என நினைக்கவில்லை – ஜெயசூர்யா!!

‘‘ராஜினாமா கடிதம் அனுப்புகிறேன்’’- சபாநாயகரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட கோத்தபய: விவரங்களை வெளியிட மாலத்தீவு மறுப்பு!!

பொதுமக்களின் பாதுகாப்புக்கு பெரும் ஆபத்து! மகாநாயக்க தேரர்கள்!!

ஜனநாயகத்திற்கு எதிரான ஃபாசிச அச்சுறுத்தலை நிறுத்த வேண்டும் – ரணில்!! (படங்கள்)

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலத்தீவுக்கு தப்பிச் சென்றது ஏன்? (படங்கள்)

இலங்கையில் நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்ற மக்கள் மீது நூற்றுக்கணக்கான கண்ணீர் புகைகுண்டு வீச்சு!! (படங்கள்)

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு நடைமுறை! வெளியானது வர்த்தமானி !!

களமிறங்குகிறதா ராணுவம்? இலங்கையில் உச்சக்கட்ட பதற்றம் – சரத் பொன்சேகா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! (படங்கள்)

பாராளுமன்றத்துக்கு முன்பாக போராட்டம்; ’ரணிலின் கேம்’ !!

சபாநாயகர் இல்லத்திற்கு முன் பதற்றநிலை!

அதிவிசேட வர்த்தமானி வெளியானது !!

புதிய பிரதமரை நியமிக்குமாறு ரணில் கோரிக்கை !!

சிங்கப்பூர் சென்றதும் இராஜினாமா?

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை !!

அதிரடியான தீர்மானத்தை எடுத்த கட்சித் தலைவர்கள்!!

கட்சித் தலைவர்களால் கோரிக்கை நிராகரிப்பு !!

சபாநாயகர் அதிரடி அறிவிப்பு !!

ரணிலின் உத்தரவுகளை ஏற்க வேண்டாம் – பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா!!

பாராளுமன்றத்தை கைப்பற்ற முயற்சி: கண்ணீர்ப்புகை தாக்குதல் !! (வீடியோ)

மாலைதீவு பொலிஸாரால் இலங்கை பிரஜை கைது!! (வீடியோ)

மாலத்தீவில் அகதியாக கோத்தபாய- வெளியேற்ற வலியுறுத்தி தலைநகர் மாலேவில் இலங்கை மக்கள் போராட்டம்!! (படங்கள், வீடியோ)

அரசாங்கம் அடக்குமுறையை ஆரம்பித்துள்ளது!!

மக்களிடம் சவேந்திர சில்வா விடுத்துள்ள வேண்டுகோள்!!

சபாநாயகர் கட்சி தலைவர்களுக்கு விடுத்துள்ள அவசர அழைப்பு!!

பதில் ஜனாதிபதியின் விஷேட அறிவிப்பு (காணொளி)

மற்றுமோர் அறிவிப்பை விடுத்தார் மஹிந்த !!

’ரணிலின் சட்டத்தை நாய் கூட மதிக்காது’ !!

பிரதமர் அலுவலகமும் போராட்டக்காரர்கள் வசம் (Video)

மாலைத்தீவிலிருந்தும் பறந்த கோட்டா!!

ஏமாற்றினார் மஹிந்த !!

’ரணிலின் பதவிப் பேராசைக்காக நாட்டை பலிகொடுக்க வேண்டாம்’ !!

பதில் ஜனாதிபதியான பிரதமர் நியமனம்!!

சடசடவென துப்பாக்கிச் சூடு !!

ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் இன்னும் கிடைக்கவில்லை!!

கொழும்பு வானில் வட்டமிடும் ஹெலிகள் !! (வீடியோ)

மேல் மாகாணத்திற்கு ஊரடங்கு; நாடளாவிய ரீதியில் அவசரகாலச் சட்டம் !!

அமெரிக்க தூதரகம் அவசர அறிவிப்பு !!

பதில் ஜனாதிபதி நியமிக்கவில்லை: மஹிந்த !!

பிரதமர் அலுவலகத்துக்கு முன் பதற்றம் !!

இந்தியா மறுத்தது !!

பிரதமர் அலுவலகமும் உறுதிப்படுத்தியது !!

கோட்டா வெளியேற்றம்; விமானப்படை விளக்கம் !!

விமானப்படை விமானத்தில் பறந்தார் கோட்டா !!

பேராசைப் பிடித்த ரணில் பதவி விலகுவார் என எதிர்பார்க்க முடியாது !!

கோட்டாவின் கோரிக்கை: நிராகரித்தது அமெரிக்கா !!

கோட்டா தப்பியோட முயன்றாரா?

எதிர்க்கட்சிகளால் செய்ய முடியாததை மக்கள் செய்துள்ளனர்!! (வீடியோ)

ரணிலை ஜனாதிபதியாக நியமிக்க தீர்மானம் !!

பிரதமர் பதவியை தமிழர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடாது !!

பிரதமரின் ஊடகப் பிரிவிலுள்ள சில பொருள்கள் மாயம் !!

இராஜினாமா கடிதத்தில் கையெழுத்திட்ட ஜனாதிபதி !!

விமான நிலையத்தில் பசில் ராஜபக்சவுக்கு ஏற்பட்ட நிலை!! (வீடியோ)

கட்சி தலைவர்களுடன் போராட்டக்காரர்கள் சந்திப்பு !!

அலரிமாளிகை மோதல்; 10 பேர் வைத்தியசாலையில் !!!

ரணில் விக்ரமசிங்கவின் ஜனாதிபதி கனவு பலிக்குமா?

ஜனாதிபதி நாட்டில் உள்ளார் – முப்படை தளபதிகளை சந்தித்துள்ளார்!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.